இந்தியா செய்தி

4 வயது சிறுமி வன்புணர்ந்து படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

2023 ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

2023 ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ம் மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி ராணா தத்தா, இக்குற்றத்தை “அரிதிலும் அரிதானது” என சுட்டிக்காட்டி இந்த மரண தண்டனையை அறிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட Utpal Roy என்பவருக்கு, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (POCSO) பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிபதி தத்தா கூடுதல் சிறைத்தண்டனைகளையும் அபராதங்களையும் விதித்தார்.

கொலை குற்றத்திற்காக Utpal Royக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ரூ. 10,000 அபராதம் (இந்திய நாணய மதிப்பு) செலுத்துமாறும், தவறினால் ஆறு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், ஆதாரங்களை மறைத்ததற்காகவும், குற்றவாளியைக் காப்பாற்ற பொய் தகவல் அளித்ததற்காகவும் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறுமிக்கு எதிரான தீவிர பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனைத்து தண்டனைகளும் ஏககாலத்தில் (ஒன்றாக) அனுபவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

துப்ரி (Dhubri) மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாளி தேயிலைத் தோட்டத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொல்லப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

அறிக்கைகளின்படி, செப்டம்பர் 4, 2023 அன்று, ராய் சாக்லேட் தருவதாக ஆசை காட்டி சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி