நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
அத்துடன், நாமல் ராஜபக்சஷவின் பிணை விண்ணப்ப கோரிக்கை தொடர்பான தீர்மானம் செப்டம்பர் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச , இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்(CID) சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்சஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான சட்டக் குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, கோட்டை நீதவான் பசான் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.




