27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரதமருக்கு அடுத்தப்படியாக பாதுகாப்பு பிரதானி: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்

  • September 4, 2026
  • 0 Comments

27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று, பாகிஸ்தான் தேசிய பேரவை ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் சட்டம் 2026’ மற்றும் ‘தேசிய கட்டளை அதிகாரி சட்டம் 2010’-க்கான திருத்தம் ஆகியவற்றை அங்கீகரித்தது. இவ்விரு சட்டங்களும் இணைந்து, கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட […]

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர்

  • September 4, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்தியதாகவும், அவர்களின் ஆசிகளைப் பெற்றதாகவும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கூறியுள்ளார். டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும், அவர் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று ஆஜரான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு சுமார் 7.4 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்திற்கு […]

சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

10 நாட்கள் ஓய்வில்லாப் பணி: ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரோடு விளையாடுகிறதா விமானத்துறை?

  • September 4, 2026
  • 0 Comments

சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த பல விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டாளர்கள் (Air traffic controllers) கடுமையான உடல் மற்றும் மனச் சோர்வில் (Fatigue) இருந்தமை Reuters செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள உள்கட்டமைப்புப் பதிவுகள் மற்றும் உரையாடல் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை “சற்றுப் பைத்தியக்காரத்தனமானது” என அப்போதைய பணிப் பொறுப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். […]

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் பேரழிவு: 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின் நீர்மின் நிலையத்தோடு தொடர்புடைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேல் த்ரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் (Upper Trishuli 3A Hydropower Station) சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் சஞ்சய் சா (இயந்திரவியல் மேலாளர்) மற்றும் கபீர் மகர்ஜன் (இயந்திரவியல் மேற்பார்வையாளர்) […]

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. செய்தி

11 வயது சிறுவனின் உயிரை பறித்த நாவல் பழம்: மட்டக்களப்பில் சோகம்

  • September 4, 2026
  • 0 Comments

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ […]

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் சிறப்பு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தும் ஐ.நா அறிக்கை

  • September 4, 2026
  • 0 Comments

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2025 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் […]

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்பாடு குறித்து ஆராய்வு

  • September 3, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், அனுர கருணாதிலக தலைமையில், அவரது பணியகத்தில் இன்று காலை புரிந்துணர்வு உடன்பாடு குறித்த ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றது. பிரதி அமைச்சர் ஜனித […]

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். செய்தி

நெதர்லாந்து தூதுவருடன் சாணக்கியன் சந்திப்பு: தமிழர் பிரச்சினை குறித்து எடுத்துரைப்பு

  • September 3, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சாணக்கியன், தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை போன்ற பாரம்பரிய […]

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இலங்கை செய்தி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்

  • September 3, 2026
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.