ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதி:இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎல் (ISIL) அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு இன்று மரண தணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎல் (ISIL) பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சியடைந்த பிறகு, ஈரானுக்குள் மீண்டும் தங்களது வலையமைப்பைக் கட்டமைத்து, தாக்குதல்களை நடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக மொஹியதின் அப்துல்லாஹி மற்றும் ஹொசைன் பலானி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். ஈரான்-ஈராக் எல்லையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாமு (Bamu) மலைப்பகுதியில் தங்களது […]













