அணுசக்தி விரிவாக்க முயற்சியில் பிரான்ஸுடன் கூட்டிணையும் பின்லாந்து
அணுசக்தித் தடுப்புத் திறனின் (nuclear deterrent) வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் பிரான்ஸுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்பாடு மற்றும் உக்ரைன் போரினால் ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்ததை தொடர்ந்து அணுசக்தித் தடுப்பு முயற்சி’ (Forward Nuclear Deterrence Initiative) குறித்த அறிவிப்பை பிரான்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பின்லாந்து ஜனாதிபதி, “இந்த முயற்சி முதன்மையாக ஐரோப்பியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தனது பாதுகாப்பிற்கான ஐரோப்பாவின் பொறுப்பை உறுதிப்படுத்துவதுடன், மோதல் தீவிரமடைவதைத் தடுக்கவும் உதவுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.




