யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று  Cab ரக வாகனம், மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

வவுனியாவில் கோர விபத்து: இருவர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று  Cab ரக வாகனம், மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மரக்கறி ஏற்றிச்சென்ற   வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். உடற்கூறாய்வுப் […]

இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30) தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம்

  • July 30, 2026
  • 0 Comments

இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30) தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 T20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, கடைசியாக ஜூலை 2023 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ரஹானேவின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று, 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் […]

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துவரும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

  • July 30, 2026
  • 0 Comments

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துவரும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்த மனித உரிமைகள் அமைப்பு, இந்தியா “இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையுடன் எவ்வாறு நெருக்கமான மற்றும் லாபகரமான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது என்பதையும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விநியோகச் சங்கிலிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக மாறியுள்ளது என்பதையும்” ஆவணப்படுத்தியுள்ளது. “2023 அக்டோபர் 7 முதல் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு […]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

அமெரிக்க ராஜதந்திரிகள் குழு சஜித்துடன் சந்திப்பு

  • July 30, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொருளாதார ஒத்துழைப்பு, ஆளுகை, கல்வி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் , ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் […]

அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா செய்தி

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு

  • July 30, 2026
  • 0 Comments

அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அசாமில் வெள்ளத்தில் சிக்கி சிவசாகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் என நேற்று மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது. அரசு அறிக்கையின்படி, சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு […]

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத வீடியோக்கள்: டெலிகிராமிற்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

  • July 30, 2026
  • 0 Comments

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது. டெலிகிராமில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்கள் குறித்து ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையர் (eSafety Commissioner) ஜூலி இன்மான் கிராண்ட் வியாழக்கிழமை இந்த சட்ட நடவடிக்கையை அறிவித்தார். இதன் மூலம் டெலிகிராம் நிறுவனம் […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடரும்வரை ஓயமாட்டோம்: ஈரான் எச்சரிக்கை

  • July 30, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்குள்ள ஒரு விமானப்படை தளம் மற்றும் கட்டளை மையம் (command centre) ஆகியவற்றைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை, ஈரானிய தரப்பின் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும், தெஹ்ரானுக்கு எதிரான அச்சுறுத்தல் நிறைந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரானிய தரப்பால் அங்கீகரிக்கப்படாத […]

உலகம் செய்தி

எகிப்து துறைமுக சேமிப்பு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

  • July 30, 2026
  • 0 Comments

ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை புதன்கிழமை இரவு நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள டாமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் (gas storage tanker) மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பிரித்தானிய கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே (Ambrey) தனது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவித்தது. எகிப்தின் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்திய போதிலும், ட்ரோன் தாக்குதல் குறித்து […]

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஆளுநரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • July 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று டார்வின் நகரில் நடைபெற்ற ‘என்.டி தாய்லாந்து பிரமாண்ட திருவிழா’வின் (NT Thailand Grand Festival) போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ஆளும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை இன்று […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இலங்கை செய்தி

நீதித்துறை தொடர்பான அரசின் முடிவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி

  • July 30, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் அனைத்து […]