மூன்று போட்டிகளில் 12 கோல்களை வாரி வழங்கிய துனிசியா அணி, பெரும் ஏமாற்றத்துடன் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறது. செய்தி விளையாட்டு

ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது துனிசியா அணி

  • June 26, 2026
  • 0 Comments

நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தி, உலகக் கோப்பையின் குரூப் F பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இதன் மூலம், அடுத்த சுற்றில் (last 32) பிரேசில் அணியுடன் மோதவிருந்த கடினமான சூழ்நிலையை அவ்வணி தவிர்த்துள்ளது. ரோனால்ட் கூமேனின் (Ronald Koeman) தலைமையிலான நெதர்லாந்து அணி, எதிரணியின் பலவீனமான தற்காப்பு ஆட்டத்தைப் பயன்படுத்தி, ஆரம்பத்திலேயே இரண்டு கோல் முன்னிலை பெற்றது. போட்டியில் ஒரு புள்ளியைக் கூட பெறாமல் துனிசியா இத்தொடரிலிருந்து வெளியேறுகிறது. முதலில், டென்சல் […]

டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு என்று வரும்போது, அதன் தன்மை மற்றும் வகையைப் பொறுத்தே சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிவரும். அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி: உண்மை கண்டறியப்படுமென நீதி அமைச்சர் உறுதி

  • June 25, 2026
  • 0 Comments

“செம்மணி மனித புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படும்” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25) சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்தச் சூளுரையைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளிக்கையில், “செம்மணி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு என்று வரும்போது, அதன் தன்மை மற்றும் வகையைப் பொறுத்தே சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் […]

வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். உலகம் செய்தி

100 இற்கு மேற்பட்ட கட்டிடங்கள் சரிவு

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இக்குழுக்கள் அங்கு வருகை தரும் ஏனைய சர்வதேச மீட்புக் குழுக்களுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் இதர ஆதரவை வழங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மீட்புக் குழுக்கள் லா குவைரா மற்றும் தலைநகர் […]

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அரசியல் இலங்கை செய்தி

கோழிப்பண்ணைமீது நரிக்கு ஏன் அக்கறை? கடுப்பாகிய நீதி அமைச்சர்

  • June 25, 2026
  • 0 Comments

நீதித்துறை பற்றி எதிரணி உறுப்பினர்கள் பேசுவதானது, கோழிப்பண்ணை மீது நரி அக்கறை காட்டுவது போல் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். கடந்த காலங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு விதத்திலும், சாதாரண மக்களுக்கு வேறு விதத்திலுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கட்சி தாவினால் வழக்குகள் மாயமாகும் நிலையும் அன்று […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

  • June 25, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலவதுவல நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருகின்றது. மாகாணசபைத் தேர்தல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாணசபைத் தேர்தலை விரைவாக […]

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

164 பேர் பலி – 971 பேர் காயம்: சர்வதேச உதவி கோருகிறது ஐ.நா.

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக லா குவைரா மாநிலம் இடிபாடுகளால் சூழப்பட்ட ஒரு பேரிடர் மண்டலமாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அங்கிருந்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடந்த நூற்றாண்டில் அந்தப் பிராந்தியத்தில் […]

நிலநடுக்கத்தில் 32 பேர் இறந்துள்ளனர் என்றே அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் ஆயிர்ககணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உலகம் செய்தி

ஊடக கட்டுப்பாடுகளை வெனிசுலா உடன் நீக்க வேண்டும் – ஐ.நா.

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நிலவும் கடுமையான அரசியல் மற்றும் சமூகச் சூழலில், தகவல் பரிமாற்றத்திற்கான தடைகளை உடனடியாக நீக்குமாறு ஐ.நா.சபை அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலையில், பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் முக்கிய கடமையாகும் என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. இக்கட்டான இத்தருணத்தில் வெளிப்படையான ஊடகச் செயல்பாடுகள் மட்டுமே பேரழிவுகளைத் தடுக்க உதவும் என்று […]

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 1.73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்; இது உலகளாவிய சாலை விபத்து மரணங்களில் சுமார் 11 சதவீதமாகும். இந்தியா செய்தி

இந்தியாவில் மிகவும் ஆபத்தான பயண நேரம் – வெளியான புதிய ஆய்வு

  • June 25, 2026
  • 0 Comments

இந்தியாவில் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரமே மிகவும் ஆபத்தான பயண நேரம் என ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. சுனோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை 2026’, விபத்துகள் நிகழும் நேரங்களை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கை, இரவு நேரங்களில் ஓட்டுநரின் நடத்தை, சோர்வு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எடுத்துரைக்கிறது. இந்த அறிக்கை, 17 மாநிலங்களில் 27,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மற்றும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான […]

பில் கேட்ஸின் கூற்றுப்படி, இந்த உறவுகள் எப்ஸ்டீனுடனான எனது சந்திப்புகளுடன் தொடர்புடையவை அல்ல, ஆனால் எப்ஸ்டீன் இந்தத் தகவலையும் சில பொய்க் குற்றச்சாட்டுகளையும் பயன்படுத்தி என்னை மீண்டும் அவருடன் இணைய வைக்க முயன்றார். உலகம் செய்தி

‘எப்ஸ்டீன் என்னை மிரட்ட முயன்றார்’ – உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

  • June 25, 2026
  • 0 Comments

அமெரிக்க காங்கிரஸின் மேற்பார்வைக் குழுவின் முன் மூடிய அறைக்குள் அளித்த வாக்குமூலத்தில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு மூன்று பெண்களுடன் உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். அதேசமயம், பிரபல பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அவருடைய இரண்டு உறவுகள் பற்றித் தெரிந்திருந்தது. ரஷ்ய ஜிம்னாஸ்ட் மிலா அன்டோனோவா மற்றும் அணு விஞ்ஞானி கரிமா நிக்மதுலினா ஆகியோருடனான தனது உறவுகள் குறித்து ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்தது என்று பில் கேட்ஸ் கூறினார். மேலும், தொழிலதிபர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் […]

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

வெனிசுலாவுக்கு தோள்கொடுக்க இந்தியா தயார்

  • June 25, 2026
  • 0 Comments

“வெனிசுலாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது.” – என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய பிரதமரின் X பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து அறியும்போது ஆழ்ந்த வேதனையடைகிறோம். இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும், குறிப்பாகத் […]