ஊடக கட்டுப்பாடுகளை வெனிசுலா உடன் நீக்க வேண்டும் – ஐ.நா.
வெனிசுலாவில் நிலவும் கடுமையான அரசியல் மற்றும் சமூகச் சூழலில், தகவல் பரிமாற்றத்திற்கான தடைகளை உடனடியாக நீக்குமாறு ஐ.நா.சபை அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியான நிலையில், பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் முக்கிய கடமையாகும் என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
இக்கட்டான இத்தருணத்தில் வெளிப்படையான ஊடகச் செயல்பாடுகள் மட்டுமே பேரழிவுகளைத் தடுக்க உதவும் என்று சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.
வெனிசுலாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனினும், அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதில் அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்படுகின்றது. டிஇந்நிலையிலேயே ஐ.நா. இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.




