யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனாவின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்திற்கு வந்த ‘செருப்பு மாலை’

  • June 23, 2026
  • 0 Comments

“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அர்ச்சுனா எம்.பி. சபையில் கருத்து வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்: “அண்மையில் எனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை ஒன்று […]

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) ஐரோப்பா செய்தி

நம்பகத்தன்மையை இழந்துவிட்டது ஐரோப்பா: ஈரான் விசனம்

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன நடத்திய தாக்குதலின்போது போது ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த அணுகுமுறையை ஈரான் கடுமையாக விமரிசித்துள்ளது. மேற்படி போரின்போது ஐரோப்பிய சக்திகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தவறான கொள்கைகளால் உலக அரங்கில் ஐரோப்பாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ” எதிராகத் திணிக்கப்பட்ட இரண்டு போர்களின் போதும், ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற […]

டென்மார்க், கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டின் போது பிரதமர் கீர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் உயர் பிரதிநிதி காஜா காலாஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். (அக்டோபர் 2, 2025). ஐரோப்பா செய்தி

‘இவரே சிறந்த தலைவர்’ – Keir Starmer ஐ புகழும் ஐரோப்பிய தலைவர்கள்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Keir Starmer உள்நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், முந்தைய பிரதமர்களை விட இவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்ததாக ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாது என்பதில் ஸ்டார்மர் உறுதியாக இருந்தாலும், பிரெக்சிட் தாக்கங்களுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்தார். மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் ஆகிய ‘E3’ கூட்டணிக் தலைவர்களுடன் இணைந்து, உக்ரைனுக்கான பிரித்தானியாவின் […]

ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. ஐரோப்பா செய்தி

வெப்ப அலை: பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வானிலை ஆய்வு மையம் முதன்முறையாக அதிதீவிர சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வெப்ப அலை பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மின்சாரம், நீர் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். லண்டன் முதல் பர்மிங்காம் வரையிலான பகுதிகளில் இந்த கடுமையான பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன், சில இடங்களில் இடியுடன் கூடிய […]

அல்ஜீரியாவின் அமின் குய்ரி வெற்றி கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

மீண்டெழுந்தது அல்ஜீரியா அணி

  • June 23, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண தொடரில் ஆரம்பப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-0 எனத் தோல்வியடைந்த அல்ஜீரியா, நேற்றைய போட்டியில் ஜோர்டான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மீண்டுவந்துள்ளது. மாற்று வீரராகக் களம் புகுந்த நாதிர் பென்புவாலி மற்றும் அமீன் குயிரி ஆகியோரின் அதிரடிப் பின்பாதி கோல்களின் உதவியுடன் இந்த வெற்றி சாத்தியமானது. இந்தத் தோல்வியின் மூலம், உலகக் கிண்ணத் தொடருக்கு முதன்முறையாகத் தகுதிபெற்றிருந்த ஜோர்டான் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் […]

அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. உலகம் செய்தி

‘சொல் அல்ல செயலே முக்கியம்’ – ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி

  • June 23, 2026
  • 0 Comments

வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைகளைச் சரியாகச் செயல்படுத்துவதைப் பொறுத்தே அமையும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார். வெறும் பேச்சுக்களைக் காட்டிலும் நடைமுறைச் செயல்பாடுகளே முன்னேற்றத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அசல் உடன்படிக்கைக்குப் புறம்பான கருத்துக்கள் பேச்சுவார்த்தைக்கு எவ்வித உதவியும் செய்யாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் […]

அமெரிக்க- இலங்கை பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை வழங்குவதற்கும் உறுதியான வாய்ப்புகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று போல் கபூர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் கழுகுப்பார்வை செலுத்திய அமெரிக்க ராஜதந்திரி

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார். துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்கவுடன் இணைந்து, போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டதாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க- இலங்கை பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை வழங்குவதற்கும் உறுதியான வாய்ப்புகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று போல் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

புலிகளின் முகாம்களிலிருந்து ராணுவம் கைப்பற்றிய தங்கத்தின் விபரம் வெளியானது

  • June 23, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23) பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கை இராணுவத்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் இருந்து தங்கம் பெறப்படவில்லை. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது புலிகளின் முகாம்கள் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் இருந்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்க […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்தியா செய்தி

இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்குகிறது ஐக்கிய அரபு அமீரகம்

  • June 23, 2026
  • 0 Comments

பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் அகஸ்தீர் வான்பாதுகாப்பு ஏவுகணை ஆகியவற்றை விற்பனை செய்வது தொடர்பில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சு நடத்திவருகின்றது. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கின்றன. அதிவேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை நிலப்பகுதியிலிருந்தும், கடலில் இருந்தும், வானில் இருந்தும் ஏவ முடியும். இந்தியாவிடம் இருந்து முதன் முதலில் பிரமோஸ் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதற்கு பிலிப்பைன்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, […]

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் சகோதரரான பஸில் ராஜபக்ச ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர். அரசியல் இலங்கை செய்தி

அதிகாரத்துக்காக எதையும் செய்யும் ராஜபக்சக்கள்

  • June 23, 2026
  • 0 Comments

“அதிகாரத்துக்காக ராஜபக்சக்கள் எதையும் செய்வார்கள். தமது திட்டங்களுக்குத் துணைநிற்கும் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளையும் அவர்கள் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். சுரேஷ் சலே விடயத்திலும் இதுதான் நடக்கின்றது.” -இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “குற்றம் இழைத்தவர்கள் தாமாக முன்வந்து உண்மைகளை வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே, அவர்களிடமிருந்து தகவல்களைச் சட்டப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இது விசாரணை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். உலகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் […]