2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். செய்தி

மீண்டெழுகிறது சுற்றுலாத்துறை – 1.1 மில்லியன் பயணிகள் இலங்கை வருகை

  • June 24, 2026
  • 0 Comments

2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 281,418 பேரும், பிரித்தானியாவில் இருந்து 104,754 பேரும், ரஷ்யாவில் இருந்து 76,963 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். குறித்த நாடுகளே முதல் மூன்று இடங்களில் உள்ளன. சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து, கனடா […]

பிரான்சில் இன்று 58 பிராந்தியங்களுக்கு கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா செய்தி

பிரான்சில் கடும் வெப்ப அலை-மின்சார கட்டமைப்பு பாதிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலை, பிரான்சில் ஒரு பெரும் மின்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடமேற்கு பிரான்சில் சுமார் 68,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபினிஸ்டெர் கடற்கரைப் பகுதியில் மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை இரவு குயிம்பர் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மின் கட்டமைப்பு இயக்குநர்களின் குழுக்கள் இரவு முழுவதும் மின்சாரத்தை […]

பிராந்தியத்தில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், வான்வழிப் பயணங்களுக்கு உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பா செய்தி

ஈரான், லெபனான் வான்வெளிகள் ஆபத்து – EU எச்சரிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானிய மற்றும் லெபனான் வான்வெளிகளைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமை (EASA) விமான நிறுவனங்களுக்குப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிராந்தியத்தில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், வான்வழிப் பயணங்களுக்கு உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, ஈரான், ஈராக் மற்றும் லெபனான் பகுதிகளில் திடீர் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிற அண்டை நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தும்போதும் […]

இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, உலகம் செய்தி

லெபனான் பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய திட்டம் முன்வைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, லெபனானில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், இஸ்ரேலியப் படைகள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து வெளியேறவும், அங்கு லெபனான் ராணுவம் பொறுப்பேற்கவும் அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நடமாட்டத்தைத் தடுக்க இந்த ஆக்கிரமிப்பு விலக்கல் திட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான தீர்வு […]

முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல் எதிரொலி: ஆஸ்திரேலிய கோழி இறக்குமதிக்கு தடை

  • June 24, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடம் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதை பப்புவா நியூ கினி (PNG) நாடு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது. 2024–25 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் டன் கோழி இறைச்சி உற்பத்தி […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு குறித்து மஹிந்த அணிக்கு அச்சம்

  • June 24, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் […]

IAEA Director-General Rafael Grossi செய்தி

ஈரானில் விரைவில் ஆய்வு: சர்வதேச அணுசக்தி அமைப்பு நம்பிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி மையங்களை, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்கள் விரைவில் பார்வையிடுவார்கள் என்று அதன் தலைவர் Rafael Grossi நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வுகள் நடைபெறுவது உறுதி என்றாலும், அதற்கான துல்லியமான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஆய்வாளர்களை மீண்டும் அழைப்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுவதை அந்த நாடு மறுத்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சு, அணுசக்தி முகமையுடன் தற்போதைக்கு எந்த சந்திப்போ அல்லது ஆய்வு திட்டங்களோ இல்லை என்று […]

ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000 மாலுமிகளை மீட்க ஐ.நா. திட்டம் வகுப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரினால் வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை மீட்பதற்கான பாரிய திட்டத்தை ஐ.நா அறிவித்துள்ளது. ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர கடந்த வாரம் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் […]

தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ரஜினியின் 173வது படத்தின் பெயர் அறிவிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கமித்துள்ளமை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதும் உள்ள 30 வானிலை நிலையங்களின் சராசரி வெப்பநிலையைக் கணக்கிடும் தேசிய வெப்பக் குறியீடு 29.8 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வாட்டி வதைக்கிறது வெப்ப அலை – பிரான்சில் நிலைமை மோசம்

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை (Heat wave) தாக்கி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மற்றும் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் ஆகியவற்றின் பார்வையாளர் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் கடுமையான வெப்பநிலை பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதை அடுத்து, அங்குள்ள வானிலை ஆய்வு மையங்கள், பிரான்ஸைப் போலவே கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பைக் கருதி ‘சிவப்பு எச்சரிக்கை’ […]