இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 48வது நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது செம்மணிப் புதைகுழிக்கு அருகே எழுமாற்றாக இரண்டு இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட போது, ஒன்றில் தலையற்ற எலும்புக்கூடு உள்ளிட்ட 3 எலும்புக்கூடுகளும் மற்றொன்றில் ஒரு எலும்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை நேற்றைய அகழ்வின் போது மொத்தமாக 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இதையடுத்து, இதுவரை 102 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, 524 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 513 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை