செய்தி விளையாட்டு

2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி

ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​கள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்​ளன.
தென் ஆப்​பிரிக்​கா​வில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளன.

இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை செய்துள்ளது ICC.

அந்த வகையில் சூப்பர் சீரிஸ், குரூப் ஸ்டேஜ், சூப்பர் 7, அரை இறுதி, இறுதிப் போட்டி என 4 சுற்றுகளை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் சீரிஸில் 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள அணிகள் மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி குரூப் ஸ்டேஜில் இணையும். ரவுண்ட் ராபின் முறையில் குரூப் சுற்று நடத்தப்படும். இதில் 12 அணிகள் பங்கேற்கும்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்

இந்தியா

ஆஸ்திரேலியா

இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா

நியூஸிலாந்து

இலங்கை

பாகிஸ்தான்

பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான்

ஜிம்பாப்வே

இதுவரை மொத்தம் 10 அணிகள் இந்த தொடருக்கு முன்னேறி உள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி அண்மையில் இணைந்தது.

தொடரை நடத்தும் அணியை தவிர்த்து ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பட்டியலில் ‘டாப் 8’ இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதம் உள்ள இரண்டு இடத்துக்கு 10 அணிகள் பங்கேற்று விளையாடும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி மற்றும் சூப்பர் சீரிஸ் தொடரில் வெற்றி பெறும் அணியும் தகுதி பெறும்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ரசிகர்கள், பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி