பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து3 லட்சத்து 46 ஆயிரத்து 57 பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 323 பேரும் , சீனாவில் இருந்து 91 ஆயிரத்து 538 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து 81 ஆயிரத்து 101 பேரும், ரஷ்யாவில் இருந்து 79 ஆயிரத்து 628 பேரும், பிரான்ஸில் இருந்து 67 ஆயிரத்து 07 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 68 ஆயிரத்து 868 பேரும், கனடாவில் இருந்து 27 ஆயிரத்து ,937 பேரும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 06 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.




