நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்​சி​யினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா செய்தி

போராட்டக்காரர்கள் எச்சரிக்கை: டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

  • July 23, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்​சி​யினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20-ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது கல்வீசித் […]

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

யுரேனியத்தைச் செறிவூட்ட சவூதிக்கு அமெரிக்கா அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியில் எட்டப்பட்ட ஒப்பந்தம்

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு உலைகளைக் கட்டுவதற்கும், யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் சவூதி அரேபியாவிற்கு அனுமதி கிடைக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது நிர்வாகக் காலம் மற்றும் ஜோ பைடனின் ஆட்சிக் காலம் எனப் பல ஆண்டுகளாக சவூதியுடனான இந்த சிவில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று […]

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

‘அரசியல் கைதிகள்’ என்று எவரும் சிறையில் இல்லை: நீதி அமைச்சர் சர்ச்சை கருத்து

  • July 23, 2026
  • 0 Comments

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் ‘அரசியல் கைதி’ என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலை […]

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொடூரச் செயல்: ஆஸ்திரேலிய இளைஞன் கைது

  • July 23, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலியா பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சிறுவர்கள் சுரண்டல் எதிர்ப்புப் பிரிவு’ (Joint Anti Child Exploitation Team) புலனாய்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) வடக்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரை நேற்று கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர். […]

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு

  • July 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 94 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 471 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 455 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.  உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கர்கள் போரை எதிர்க்கவில்லை: ஈரான்மீதான தாக்குதல் தொடரும்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார். “அவர்கள் (ஈரான்) கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறார்கள், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறார்கள்” எனவும் டிரம்ப் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடர்பில் மக்கள் ஆதரவு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், “உண்மையில், அமெரிக்கர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் அல்லர் ” எனக் குறிப்பிட்டார். எனினும், கடந்த […]

ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

போர் மரண எண்ணிக்கையை இன்று வெளியிட்டது ஈரான்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை குறைந்தபட்சம் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க மத்திய கட்டளைக் பீடம் (US Central Command) தெரிவித்துள்ளது.

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர். செய்தி விளையாட்டு

சூப்பர் ஹிட் உலகக்கோப்பை: அமெரிக்காவில் புதிய சாதனை

  • July 22, 2026
  • 0 Comments

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர். இது முந்தைய பார்வைகளின் சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளதுடன், பல தசாப்த கால முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டிற்கான வரவேற்பு எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதையும் உணர்த்தியுள்ளது. நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதும் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் […]

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதன் போது , தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக […]

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் நிறுவனம், உக்ரைனில் இலகுரக பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஐரோப்பா செய்தி

பிரிட்டிஷ் L119 பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்யப் போகும் உக்ரைன்

  • July 22, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் நிறுவனம், உக்ரைனில் இலகுரக பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. “உக்ரைன் ஆயுதப் படைகளின் பயன்பாட்டிற்காக எல்119 இலகுரக துப்பாக்கியின் ஒரு வகையை உருவாக்குவதற்கு இந்த மூலோபாய கூட்டாண்மை ஆதரவளிக்கும்,” என்று ஃபார்ன்பரோ சர்வதேச விமானக் கண்காட்சியைத் தொடர்ந்து BAE சிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு நிறுவனம் அடையாளம் காணப்படவில்லை. இந்த ஆவணம், […]