பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை நோக்கி நகரும் வெப்ப அலை – ஐரோப்பிய மக்கள் பரிதவிப்பு

  • June 27, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பல நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய மக்கள் இன்றைய தினமும் (27) கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டனர். பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலை தற்போது போலந்தை […]

சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: இருவர் பலி – பலர் காயம்

  • June 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் Sumy பிராந்தியத்தில் ஒருவரும், Dnipropetrovsk பிராந்தியத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், தென்கிழக்கு நகரமான Zaporizhzhia மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனின் சுமி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது ரஷ்யா […]

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை செய்தி

இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: முற்றுகைப் போராட்டத்தால் திருமலையில் பதற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்திற்கு காரணமான அலட்சியப் போக்கைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று (26-06-2026), இந்த நிலையத்தின் மூலம் ஆழ்கடல் நீச்சலுக்கு (Diving) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் இதன்போது அவருக்கு […]

"எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இலங்கை செய்தி

சுரேஷ் சலே சாகும்வரை சிலர் காத்திருப்பு: மனைவி கவலை

  • June 27, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவரது மனைவி மனோரி சலே கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் இன்று சென்று சுரேஷ் சலேவை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குப் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் […]

ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பா கல்வி

இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஜெர்மன் வலியுறுத்து

  • June 27, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஜெர்மனி வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லெபனான் தனது நாட்டில் ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேலுக்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அமெரிக்காவின் மத்தியஸ்தம் முக்கியப் பங்காற்றியதை அவர் பாராட்டினார். ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை […]

பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் கடும் கண்டனம்

  • June 27, 2026
  • 0 Comments

பஹ்ரைன் நாட்டின்மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் வன்மையாகக் கண்டித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. அண்டை நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை குவைத் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குவைத்த வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த ஒரு எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற ஒரு பொருளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விபத்தினால் கடலில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அசம்பாவிதம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணையைத் […]

பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசியல் இலங்கை செய்தி

சூழ்ச்சிகள் அம்பலம்: விசாரணை வேட்டை தீவிரம்

  • June 27, 2026
  • 0 Comments

குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “குற்ற […]

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக

  • June 27, 2026
  • 0 Comments

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு

  • June 27, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் […]