ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த ஒரு எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற ஒரு பொருளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்த விபத்தினால் கடலில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த அசம்பாவிதம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள மற்ற கப்பல்களுக்குப் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.




