சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு
ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த மோதல் போக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




