செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் இன்று (16) அடையாளம் காணப்பட்டன.
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (16) 34 யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அகழாய்வின் 34ஆவது நாளான இன்று , மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து, இதுவரை மொத்தமாக 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 416 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.




