4 ஆண்டுகால தடைக்கு எதிராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மேன்முறையீடு செய்தி விளையாட்டு

4 ஆண்டுகால தடைக்கு எதிராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மேன்முறையீடு

  • August 25, 2026
  • 0 Comments

முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவா (Marketa Vondrousova), ஊக்கமருந்து பரிசோதனையைத் தவறவிட்டதற்காகத் தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுப் பெறப்பட்டதை உறுதிசெய்துள்ள CAS அமைப்பு, இதற்கான விசாரணைத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின்படி செக் குடியரசைச் சேர்ந்த 27 வயதான வோண்ட்ரௌசோவா, வரும் 2030 ஜூன் 21 ஆம் திகதி வரை விளையாட முடியாது. கடந்த […]

மாறுமா ஈரானின் மனம்? பாகிஸ்தான் ராணுவ தளபதி தீவிர வியூகம் உலகம் செய்தி

மாறுமா ஈரானின் மனம்? பாகிஸ்தான் ராணுவ தளபதி தீவிர வியூகம்

  • August 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தெஹ்ரானில் உள்ள அதிகார மையங்களில் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இப்பயணத்தின் போது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் தலைமைப் பேச்சாளராகச் செயல்படும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோரை ஆசிம் முனீர் சந்தித்து […]

இந்தியா செய்தி

பிஹாரில் மாணவர் போராட்டம் தீவிரம்

  • August 25, 2026
  • 0 Comments

70 வது பிஹார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (BPSC) தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் முன்னெடுத்த பேரணியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது பிஹாரிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 70-வது BPSC தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டும் மாணவர்கள், அந்தத் […]

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

OMP நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்

  • August 25, 2026
  • 0 Comments

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வைக் கண்டித்தே, வடக்கு – கிழக்கு […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடுகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது: அமைச்சர் உத்தரவு

  • August 25, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் முதலீட்டாளர்கள் நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக்கூடாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தாமதமின்றி உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ‘சன்சக்தி டிரேடர்ஸ்’ (தனியார்) நிறுவனம் முன்னெடுக்கவுள்ள முதலீட்டுத் திட்டம் குறித்து விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் […]

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை செய்தி

போரால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நீதி அமைச்சர்

  • August 25, 2026
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார். […]

'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

டித்வா புயல் சேதம்: 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • August 25, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக, 18 மாத காலத்திற்குள் 9 பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன.. இந்த புனரமைப்புப் பணிகளுக்காகச் சீனா 7,929 மில்லியன் யுவான் நிதியுதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஒப்பந்தம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி […]

கொழும்பு, இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை செய்தி

இரத்மலானையில் பயிற்சி விமானம் விபத்து: தப்பினார் விமானி

  • August 25, 2026
  • 0 Comments

கொழும்பு, இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இரத்மலான விமானப் பயிற்சி பாடசாலையின் பயிற்சி விமானி ஒருவர் சற்று முன்னர் செஸ்னா -152 விமானத்தை தரையிறக்க முயன்ற போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் விமானம் சேதம் அடைந்துள்ள போதும், விமானி காயமின்றி தப்பியுள்ளார். விபத்தைத் தொடர்ந்து இரத்மலான விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தை அகற்றி, ஓடுபாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு […]

பிரான்ஸ்,சவுதி இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து கைச்சாத்து ஐரோப்பா செய்தி

பிரான்ஸ்,சவுதி இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • August 25, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் (MBS) ஆகியோருக்கு இடையில் எலிசி (Elysee) மாளிகையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றது. இதனையடுத்து பாரிஸுக்கு அருகில் 6 பில்லியன் யூரோ ($7 பில்லியன்) செலவில் பிரம்மாண்ட கேளிக்கை பூங்கா ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை பிரான்ஸும் சவுதி அரேபியாவும் அறிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மேக்ரான் மற்றும் பட்டத்து இளவரசர் எம்.பி.எஸ் முன்னிலையில் […]

இலங்கை செய்தி

‘எல் நினோ தாக்கம்’ – இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • August 25, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, அடுத்த ஆறு மாதங்களுக்கான தரவுகளை ஆய்வு செய்ததில், இக்காலகட்டத்தில் வழக்கமான பருவகால சராசரியை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். வழக்கமாக நாட்டின் வருடாந்த மழைவீழ்ச்சியில் 30% […]