#Parasakthi #Sivakarthikeyan #SudhaKongara #MadrasHighCourt #ParasakthiFromJan10 #SK25 #CinemaNews #TamilCinema #பராசக்தி பொழுதுபோக்கு

தடைகளைத் தகர்த்த ‘பராசக்தி’! ஜனவரி 10-ல் திரையரங்குகளில் சீற்றம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

  • January 2, 2026
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான “பராசக்தி” வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், இப்படம் வரும் ஜனவரி 10, 2026 அன்று திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது. உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து தான் எழுதிய ‘செம்மொழி’ என்ற கதையைத் திருடி, […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் நான்கே நாட்களில் 200 கிளிகள் மரணம்

  • January 2, 2026
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) கார்கோன்(Khargone) மாவட்டத்தில் உள்ள நர்மதா(Narmada) நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக குறைந்தது 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்வா(Padwa) பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழி பாலம் அருகே கடந்த நான்கு நாட்களில் இந்த கிளிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின் போது சில கிளிகள் உயிருடன் இருந்தன, ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி […]

உலகம் செய்தி

22 வயது அமெரிக்க ஆடவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • January 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்(America) விஸ்கான்சினைச்(Wisconsin) சேர்ந்த 22 வயது ஜாலின் வைட் என்ற நபருக்கு தனது 8 மாத மகனை கடுமையாக காயப்படுத்தியதற்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. NBA 2K என்ற இணைய விளையாட்டில் தோல்வியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மில்வாக்கி(Milwaukee) வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற முறையில் குழந்தைக்கு உடல் ரீதியாக பெரும் தீங்கு விளைவித்ததாக வைட் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கோபத்தின் ஒரு தருணத்தில் அவர் குழந்தையை சுவரில் தாக்கியதால் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்பட்டதாக நீதிமன்றம் […]

பொழுதுபோக்கு

மீண்டும் ஒரு 2005 காலத்துக் காதல் காவியம்… திரைக்கு வருகிறது “மாயபிம்பம்”!

  • January 2, 2026
  • 0 Comments

கடந்த கால நினைவுகளையும், ஆழமான காதலையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “மாயபிம்பம்”. இந்தப் படம் வரும் ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இப்படம் 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை விவரிக்கிறது. செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் அவ்வளவாக ஆதிக்கம் செலுத்தாத அந்த காலகட்டத்தில், மனித உணர்வுகளுக்கும், காத்திருப்பிற்கும் இருந்த மதிப்பை இந்தப் படம் பிரதிபலிக்கிறது. ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் […]

செய்தி விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை – தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

  • January 2, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக மார்க்கிராம் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி மார்க்கிராம்(Markram) போஸ்ச்(Bosch) டெவால்டு பிரேவிஸ்(Dewald Brevis) குயின்டன் டி காக்(Quinton de Kock) டோனி டி ஜோர்சி(Tony […]

இலங்கை

குற்றவாளியை கைது செய்ய இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி – திருகோணமலையில் சம்பவம்!

  • January 2, 2026
  • 0 Comments

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, முறைப்பாட்டாளரிடம் பத்தாயிரம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் வியாபாரி மூலம் லஞ்சம் பெற முயன்றபோது பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாட்டாளரிடம் கோரப்பட்ட லஞ்சப் பணம், கிண்ணியாவின் […]

உலகம் செய்தி

தெற்கு ஏமனில் அதிகாரப் போட்டி – ஹத்ரமவுட்டில் படைகள் மோதல்

  • January 2, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் எல்லையை அண்மித்துள்ள ஏமனின் ஹத்ரமவுட் மாகாணத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சவூதி ஆதரவு பெற்ற ஆளுநருக்கு விசுவாசமான படைகளுக்கும், பிரிவினைவாத தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு (STC) ஆதரவான படைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியா எல்லைக்கு அருகே தங்களது படைகள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக STC குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹத்ரமவுட் மாகாண ஆளுநர் சலீம் அல்-கான்பாஷி, STC கட்டுப்பாட்டில் உள்ள இராணுவ தளங்களை மீட்கும் நடவடிக்கைகள் […]

இலங்கை

திருகோணமலையில் விபத்தில் சிக்கி இளைஞர் பலி!

  • January 2, 2026
  • 0 Comments

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகம்

இந்த ஆண்டின் முதல் Wolf Moon!! எப்பொழுது தோன்றும் தெரியுமா?

  • January 2, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் வுல்ஃப் மூன் (Wolf Moon) வரும் நான்காம் திகதி தோன்றவுள்ளது. சந்திரனும் பூமியும் வழக்கத்தை விட நெருக்கமாக இருக்கும்போது    வுல்ஃப் மூன் (Wolf Moon)   ஏற்படுகின்றன, இதனால் சந்திரன் 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும். இந்த வுல்ஃப் மூன் (Wolf Moon)  ஆன்மீக ரீதியாகவும் மிகவும் பிரபல்யமானது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. பண்டைய காலங்களில், கடுமையான குளிர் நாட்களில் , வடக்கு அரைக்கோளத்தில் […]

இலங்கை செய்தி

விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

  • January 2, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சுமார் 34.19 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர்  சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 3 கிலோ 419 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர்  என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் […]