ஐரோப்பா

பிரான்சில் 07 இலட்சம் வரி செலுத்துவோரின் தகவல்கள் திருட்டு

பிரான்சில் தனிநபர்கள் மற்றும் பிரபல தொழில் அதிபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக பிரெஞ்சு நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

தீங்கிழைக்கும் நபர் ஒருவர், ஜூன் மாத இறுதியில் வரி முகமையான பொது நிதிகளுக்கான பொது இயக்குநரகத்தில் ஊடுருவியதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

திருடப்பட்ட தரவுகள் குறித்து தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட பயனர்கள், கலந்தாலோசிக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்டிருக்கக்கூடிய தரவுகள் மற்றும், பொருந்தக்கூடிய இடங்களில், பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவார்கள்,” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது,

இதற்கிடையே சுமார் 700,000  வரி செலுத்துவோரின் தரவுகள் திருடப்பட்டதாக, நாட்டில் இணையவழித் தாக்குதல்களைக் கண்காணிக்கும் தளமான FrenchBreaches தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஹேக்கர்களிடமிருந்து இந்தத் தகவலைப் பெற்றதாக அந்தத் தளம் கூறியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்