ஐரோப்பா

சொந்த நாட்டுக்குள்ளேயே தாக்குதல் நடத்திய உக்ரைன் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்!

  • January 2, 2026
  • 0 Comments

கெர்சன் (Kherson) பிராந்தியத்தின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஆளுநர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கோர்லியில் (Khorly)  கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 20இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா (Maria Zakharova), உக்ரைன் […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்குரிய அரசியல் சமர் 5 ஆம் திகதி ஆரம்பம்!

  • January 2, 2026
  • 0 Comments

பிரதான அரசியல் கட்சிகள் 2026 ஆம் அண்டுக்கான தமது முதலாவது விசேட கூட்டங்களை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் 6 ஆம் திகதி கூடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் 5 அல்லது 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இது […]

உலகம்

நிம்மதியற்ற உறக்கம் – அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் ட்ரம்ப்!

  • January 2, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், தனது உடல்நலம் குறித்த கவலைகளை, குறிப்பாக காயமடைந்த கைகள் மற்றும் கணுக்கால் வீக்கம் குறித்து எடுத்துரைத்துள்ளார். அவர் தனது காயமடைந்த கைகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைத்ததைவிட  ஆஸ்பிரின் (325 மி.கி) டோஸை அதிகளவில்  எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். 79 வயதான ட்ரம்ப் கண்களை மூடும்போது கூட நிதானமாக இருப்பதாகவும், இரவில் தாமதமாக உதவியாளரை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அதிகளவிலான துரித உணவுகளை […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

  • January 2, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றம்கூடும்வேளை, பிரேரணை அங்கீகாரத்துக்காக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும். மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே மேற்படி தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது. முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் தமது அறிக்கையில் மேற்படி நாடாளுமன்ற […]

ஐரோப்பா

கொட்டித்தீர்க்கும் பனி : மின்வெட்டு மற்றும் உயிராபத்து குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • January 2, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்தின் (Scotland) சில பகுதிகளில் பனிப்பொழிவு வானிலைக்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்றைய தினம் 40செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்திற்கான அம்பர் எச்சரிக்கை இன்று முதல் நாளை நண்பகல் வரை அமுலில் இருக்கும் என வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பயண குழப்பம், மின்வெட்டு மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் ஆரம்பம் முதல்  இந்த மாதம் முழுவதும் பனிப்பொழிவு மற்றம் […]

உலகம்

அமெரிக்காவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் : அதிகரிக்கும் மரணங்கள்!

  • January 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் காய்ச்சல் காரணமாக இதுவரை 09 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஹியோ (Ohio) மற்றும் கென்டக்கி (Kentucky) மாநிலங்களில் முதல் குழந்தை இறப்புகள் பதிவாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கென்டக்கியில்  (Kentucky)  இறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் காய்ச்சல் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்த பருவத்தில் நாடு முழுவதும் 7.5 மில்லியன் காய்ச்சல் தொற்றாளர்கள் 81,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.  அத்துடன் 3,100 […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியும் வலியுறுத்து!

  • January 2, 2026
  • 0 Comments

“தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டில் இந்த சவாலை விடுக்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை […]

அரசியல் இலங்கை செய்தி

ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?

  • January 2, 2026
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி […]

உலகம்

ஈரானில் 05ஆவது நாளாக தொடரும் போராட்டம் – முடியாட்சியை மீள கோரும் மக்கள்!

  • January 2, 2026
  • 0 Comments

ஈரானில் வாழ்க்கைச் செலவு  அதிகரித்து வருகின்றமையால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் விளைவாக பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் (Lordegan) நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அஸ்னாவில் (Azna) மேலும் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் (Kouhdasht) ஒருவர் கொல்லப்பட்டதாகவும்  ஃபார்ஸ் (Fars) செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன. நாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ், பிள்ளையான் சிறையில் வாடுவது வலிக்கிறது: மஹிந்த அணி கவலை!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். “இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் […]