ஒக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி
இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்காக இவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் திட்டமிட்டதால் இவர் குறிவைக்கப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 தாக்குதலில் பங்கேற்ற ஒவ்வொரு பயங்கரவாதியையும் கண்டறிந்து அழிக்கும் இஸ்ரேலின் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.
இந்தத் தளபதி ஜூலை இறுதியில் தாக்கப்பட்ட நிலையில், காயங்களால் உயிரிழந்ததாகத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




