உலகம்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் – தருணம் பார்த்து காத்திருக்கும் அமெரிக்கா!

  • January 2, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி அயதுல்லா கமேனி (Ayatollah Khamenei) பதவி விலகக்கோரியும், முடியாட்சியை வலியுறுத்தியும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. குறித்த பதிவில், “அமைதியான போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அது அவர்களின் வழக்கம், அமெரிக்கா அவர்களை மீட்கும்” என்று தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை அமுல்படுத்தியுள்ளது. இது அந்நாட்டின் […]

இலங்கை செய்தி

டிட்வா – பேரிடர் 80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

  • January 2, 2026
  • 0 Comments

“டிட்வா” புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 80 வீதமானோருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படி, இதுவரை 519 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட மேலும் 92 நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பேரிடரைத் தொடர்ந்து 611 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜல்தீபன் […]

கருத்து & பகுப்பாய்வு

உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட பெண் : ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!

  • January 2, 2026
  • 0 Comments

உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட உடல் ஒன்று மலாவியில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹோரா 1 (Hora 1) தொல்பொருள் தளத்தில்  பெண் ஒருவரை தகனம் செய்தமைக்கான  எச்சங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, பண்டைய வேட்டைக்காரர் சமூகங்களிடையே பின்பற்றப்பட்ட சவக்கிடங்கு நடைமுறைகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு பற்றிய பாரம்பரிய அனுமானங்களை சவால் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 500C க்கும் அதிகமான வெப்பநிலையை உருவாக்க […]

உலகம்

உயிருக்கு உலைவைக்கும் சட்டவிரோத கடற்பயணங்கள் : பலர் மாயம்!

  • January 2, 2026
  • 0 Comments

ஐரோப்பாவை அடையும் நோக்கில் 200 பேர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல்போயுள்ளதாகவும் காம்பியா கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த படகு கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்குக் கரைப் பகுதியில் உள்ள ஜினாக் (Jinack) கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தற்போதுவரை 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும்  நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத பயணங்களால் கடந்த […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித்மீது சரமாரியாக விமர்சனக்கணைகள் தொடுக்கும் ரணிலின் சகா: சங்கமம் தடைபடுமா?

  • January 2, 2026
  • 0 Comments

“ இருப்பதற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன். எனவே, மீண்டும் அங்கு செல்வதற்குரிய திட்டம் எனக்கு இல்லை.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும Ajith Manapperuma தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி UNP ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஜித் மானப்பெரும, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் SJP இணைந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் […]

உலகம்

ட்ரம்புடன் சமரசத்திற்கு தயாராகும் மதுரோ : முதலீடு செய்யவும் அழைப்பு!

  • January 2, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருப்பதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தெரிவித்துள்ளார். நேற்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் ஒன்றின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பலவந்தம் மூலம் தங்களை அடிப்பணிய வைக்க முயற்சிப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். வெனிசுலா அமெரிக்க முதலீட்டிற்கு தயாராக உள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரைட்டன் அரண்மனை விற்பனைக்கு

  • January 2, 2026
  • 0 Comments

பிரைட்டன் பியர் குழுமம் (Brighton Pier Group) தனது 126 ஆண்டு பழமையான, Grade II* பட்டியலிடப்பட்ட அரண்மனையை சந்தையில் விற்பனைக்கு வைத்துள்ளது. பிரைட்டன் அரண்மனை என்பது இங்கிலாந்தின் பிரைட்டன் நகரில் உள்ள ராயல் பவிலியன் (Royal Pavilion) என்றழைக்கப்படும் முன்னாள் அரச மாளிகையைக் குறிக்கும். அதாவது, Grade II* பட்டியலிடப்பட்ட கப்பல்துறை “வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டது” என்று குறிக்கிறது. இதற்கான மாற்றங்கள் செய்ய அரசாங்க அனுமதி தேவைப்படும். குழு புதிய உரிமையாளர்களை கோடைக்காலத்திற்குள் […]

உலகம்

வெனிசுலாவை பழிவாங்க சீனா மீது கை வைத்த ட்ரம்ப்!

  • January 2, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது  கட்டுப்பாடுகளை விதிக்க தவறியமைக்காக ஹொங்கொங் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதியை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்க கரூவூலத்துறை சீனாவிற்கு சொந்தமான நான்கு நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி விநியோகத்தில் மிகப் பெரிய வாடிக்கையாளராக சீனா காணப்படுகிறது. வெனிசுலாவின் வருமானத்தில் 95 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் […]

அரசியல் இலங்கை செய்தி

புலி புராணத்தோடு புத்தாண்டில் அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. எனவே, சவால்களை கண்டு ஓடி ஒளியும் நபர் அவர் அல்லர்.” – இவ்வாறுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராமிய மட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. […]

இலங்கை

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57 சதவீதத்தால் உயரும் மின்கட்டணம்

  • January 2, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) இலங்கை மின்சார வாரியம் (CEB) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. குறித்த முன்மொழிவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% கட்டண அதிகரிப்பு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வீட்டு மின்சார நுகர்வோர் அனைத்து நுகர்வு தொகுதிகளிலும் யூனிட் கட்டணங்கள் மற்றும் நிலையான மாதாந்திர கட்டணங்கள் இரண்டிலும் அதிகரிப்பை எதிர்கொள்வார்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.