பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்து எதிர்ப்பு ஓலையை கையளித்தது ஈரான்
தமது நாட்டுக்கு எதிராக பிரித்தானியா அதிகாரிகள் முன்வைத்துவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின், மேற்கு ஐரோப்பாவிற்கான துணைத் தலைவர் அலிரேசா யூசுபி , லண்டனின் இந்த அணுகுமுறையை கண்டித்து தூதுவர் ஹ்யூகோ ஷார்டரிடம் (Hugo Shorter) ஒரு எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை வழங்கியதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘Iran International’ ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட […]













