ஆர்ஜென்டினா மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டினரை நாடுகடத்த தீர்மானம்
ஆர்ஜென்டினாவின் தேசிய நலனை பாதிக்கும் வகையில் செயற்படும் வெளிநாட்டினரை நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்நாட்டின் மக்களுக்கு எதிராக பாகுபாடு அல்லது வன்முறையைத் தூண்டுவதாகக் கருதப்படும் வெளிநாட்டினரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் ஆணையில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜாவியர் மிலே (Javier Milei) கையொப்பம் இட்டுள்ளார்.
FIFA உலகக் கோப்பை போட்டியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் மீது வெறுப்புணர்ச்சி கருத்துக்கள் அதிகம் பிரயோகிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை அர்ஜென்டினாவின் குடிவரவுச் சட்டத்தை கணிசமாக விரிவுபடுத்துகிறது.
அர்ஜென்டினா மக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டியதாக அல்லது தேசிய சின்னங்களை அவமதித்ததாகக் கண்டறியப்பட்ட நபர்களைத் தடைசெய்ய, நாடு கடத்த மற்றும் விசாக்களை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு இது பரந்த அளவில் அதிகாரம் அளிக்கிறது.
வரலாற்று ரீதியாக குடிவரவு விஷயத்தில் வரவேற்பு நிலைப்பாட்டிற்குப் பெயர் பெற்ற நாடான ஆர்ஜென்டினாவிற்கு, இந்த நடவடிக்கை ஒரு கடுமையான மாற்றத்தைக் குறிக்கிறது.



