பொழுதுபோக்கு

நீங்க இத தானே எதிர்பார்த்துட்டு இருந்தீங்க? இதோ புது அப்டேட் வந்தாச்சி…

  • July 5, 2023
  • 0 Comments

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது 50ஆவது படத்துக்காக செய்திருக்கும் ப்ளான் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. தனுஷ் கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றால் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் தனுஷ். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. […]

இலங்கை

திருமலை- எத்தாபெந்திவெவ பகுதியல் உயிரிழந்த நிலையில் கண்டுபிடுக்கப்பட்ட கொம்பன் யானை

  • July 5, 2023
  • 0 Comments

திருகோணமலை- எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே உயிரிழந்துள்ளது. கடந்த வாரங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்தமையும், ஊருக்குள் புகுந்து வீடுகளையும் வீட்டு தோட்டங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் பலர் முறைப்பாடு செய்திருந்தனர்.இந்நிலையிலேயே இவ் உயிரிழந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் யானையின் வாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மரணத்துக்கான காரணம் […]

ஐரோப்பா

இத்தாலியில் தன் 24 ஆண்டு பணிக்காலத்தில் 20ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்!

  • July 5, 2023
  • 0 Comments

இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பாடசாலைக்கு வந்ததாகவும் எஞ்சியுள்ள 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது . தற்போது 56 வயதாகும் சின்சோ பூலியானா தி லியோ எனும் அந்த ஆசிரியர் , 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றார். வெனீஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.உடல்நிலை சரியில்லை , […]

ஐரோப்பா

உலகின் மிக விலைவுயர்ந்த கார் பார்க்கிங் பிரித்தானியாவில்!

  • July 5, 2023
  • 0 Comments

உலகின் மிக விலை உயர்ந்த கார் பார்க்கிங் கொண்ட இடங்களில் பிரிதானியாவும் இடம்பிடித்துள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி, பிரித்தானியாவின் இரண்டு விமான நிலையங்களின் கார் பார்க்கிங் விலை உயர்த்த பார்க்கிங் இடமாக முதல் பத்து இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய விமான நிலையஙகளின் கார் பார்க்கிங், இரண்டாவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன. இங்கு வாகனத்தை தரித்து நிறுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முறையே சுமார் £255.30  £180 வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழ்நாடு

குழந்தை கை இழந்த விவகாரம்; மருத்துவ அறிக்கை வெளியீடு

  • July 5, 2023
  • 0 Comments

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2ம் திகதி வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இந்த நிலையில், […]

புகைப்பட தொகுப்பு

யாழ்.நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதிக்கு கௌரவிப்பு நிகழ்வு

  • July 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை(05) காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தேரர்கள் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் நாகதீப ரஜ […]

இலங்கை

இராணுவ தலைமை அலுவலகம் முன் தீக்குளி்க்க முயன்ற பெண் – காப்பாற்றிய வவுனியா பொலிஸார்

  • July 5, 2023
  • 0 Comments

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தயார் – காப்பாற்றிய வவுனியா பொலிஸார் வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (05) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் ,குருணாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் […]

பொழுதுபோக்கு

மற்றுமொரு விவாகரத்துச் செய்தி… அதிர்ச்சியில் திரையுலகம்

  • July 5, 2023
  • 0 Comments

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா. “ஓக்க மனசு” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானவர் தான் இவர். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 5 திரைப்படங்களில் நடித்திருந்தார், அதன் பிறகு தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவருக்கு கடந்த […]

இலங்கை

கொழும்பில் துறைமுக நகரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

  • July 5, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படவில்லை. இந்த நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் அமுலுக்கு வரும் தடை

  • July 5, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் கவனச்சிதறல் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவ காரணங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு மாத்திரம் கையடக்க […]