இந்தியா

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் : வெளியான விசாரணை அறிக்கை

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாகவும் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கை முற்றிலுமாக அகற்றப்பட்டதாக குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று விசாரணைக்குழு விசாரணையை தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை […]

இலங்கை

ஹட்டனில் ஒருதொகை ID-க்களுடன் ஒருவர் கைது

  • July 5, 2023
  • 0 Comments

ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் தேசிய அடையாள அட்டைகளை அவர், தம்வசம் வைத்திருந்துள்ளார்.ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், […]

பொழுதுபோக்கு

மீண்டும் விஷ்ணு அவதாரத்தில் பிரபாஸ்? அப்போ கமல்ஹாசன் யார்?

  • July 5, 2023
  • 0 Comments

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படத்துக்கு தற்காலிகமாக ப்ராஜெக்ட் கே என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் விஷ்ணு பகவானின் ஒரு அவதாரம் என்று பரபரப்பான பேச்சுக்கள் டோலிவுட்டில் வலம் வருகின்றன. இந்தியா சினிமாவையே திரும்பிப் பார்க்க […]

ஐரோப்பா

காலரா மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கெர்சன் நகர மக்கள்!

  • July 5, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேனிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் குறிப்பாக கடுமையான குடல் நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பை எடுத்துக்காட்டியுள்ளனர். அத்துடன் காலரா நோய் தொற்றும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலர் காலரா தடுப்பூசியை இரகசியமாக அவர்களின் குடும்பத்தினருக்கு மாத்திரம் வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பிராந்தியத்தில் சுகாதார நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. உக்ரேனிய ஆயுதப் படைகளின் பொதுப் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

  • July 5, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்திய தூதர் மன்ப்ரீன் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த நிஜார் என்பவரின் படுகொலைக்கு இவர்கள்தான் காரணம் என்ற சுவரொட்டிகள் இந்த இரண்டு அதிகாரிகளின் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன. கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்கள் இருப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி ஆஸ்திரேலிய அரசை இந்திய வெளியுறவுத்துறை […]

இலங்கை

யாழ்- மானிப்பாய் பகுதியில் காணிக்குள் குழி வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • July 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து, மானிப்பாய் பொலிஸாருக்கு காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழியினை மேலும் தோண்டி ஆயுதங்களை மீட்டனர். இதன் போது குழிக்குள் இருந்து ரி […]

இலங்கை

சபாநாயகருக்கும் – ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கிறதா? – லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

  • July 5, 2023
  • 0 Comments

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவின்  செயற்பாடுகள் ஜனாதிபதிக்கு எதிராக இருப்பதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏதாவது முரண்பாடுகள் இருக்கிறதா என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றம் இன்று  (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. அதில் பாராளுமன்ற குழுக்களில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சி பிரதமகொறடா  சபை முதல்வர் பிரதி சபாநாயகர் மற்றும் […]

இந்தியா

ஒடிசாவில் 800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற பழங்குடியின தாய்!

  • July 5, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு, இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. வறுமையின் காரணமாக தாய் கராமி முர்மு, குழந்தையை இனி நாம் வளர்க்க முடியாது என நினைத்து குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு […]

ஆசியா

தென்மேற்கு சீனாவில் பெய்து வரும் கனமழை ;15 பேர் பலி

  • July 5, 2023
  • 0 Comments

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் கடந்த தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 19 மாவட்டங்களில் உள்ள 130,000க்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையினால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. முக்கியமாக யாங்சே ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 7,500 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. அங்கு பேரிடர் மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (05) காலை 7 மணி நிலவரப்படி […]

இலங்கை

காதலனுடன் தங்கியிருந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

  • July 5, 2023
  • 0 Comments

தனது காதலருடன் விடுதியில் தங்கியிருந்த யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்குவானை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 23 வயது இளைஞர் ஒருவர் தனது காதலி எனக் கூறப்படும் 22 வயதுடைய பெண்ணை இறக்குவானை பனாவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மதிய உணவு எடுத்து வருவதற்காக வெளியே சென்று பின் அறைக்கு திரும்பியுள்ளார். இதன்போது குறித்த யுவதி குளியறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் […]