விஜய் மல்லையாவின் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு
இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் வழக்கை முடிவுக்கு கொண்டுவர மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015-ல், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடம் இருந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெற்ற கடன்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, விஜய் மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் மீது கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது, மோசடி, பணமோசடி மற்றும் அந்தக் கடன்கள் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து மல்லையா இந்தியாவில் பல சட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறி வழக்குகளை கையாண்டு வருகிறார். அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. அவரை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் விஜய் மல்லையா சட்டபோராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விஜய் மல்லையாவின் வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது “உண்மையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
சமரசப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தைத் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல், தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




