உலகம்

பாலஸ்தீனர்களின் பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் அட்டகாசம் : பலர் படுகாயம்!

  • February 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் சொத்துகளை அழித்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். வடமேற்குக் கரையில்  நப்லஸுக்கு (Nablus) தெற்கே உள்ள ஒரு கிராமமான தல்ஃபிட் (Talfit) அருகே  குறித்த தாக்குதல் நேற்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியேறிகளின் தாக்குதலைத் தடுக்க முயன்ற குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்துடைப்பான அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலய தொடர்பில் எங்கள் ஆட்சியில் உயர்மட்ட விசாரணை: நாமல் திட்டவட்டம்!

  • February 14, 2026
  • 0 Comments

“ அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் தாம் கூறியது பொய் என்பது அம்பலமாகி வருகின்றது. ஆளுங்கட்சிக்குள் நடக்கும் ஊழல்களும் வெளிவருகின்றன. எனவே, தமது இருப்பைக்காக்க அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்துகின்றது.”- எனவும் […]

செய்தி

சமஷ்டி குறித்து சந்திப்பு: அழைப்பை நிராகரித்தது தமிழரசுக் கட்சி!

  • February 14, 2026
  • 0 Comments

ஒற்றையாட்சி அரசமைப்பு வரைபை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை வலியுறுத்தித் தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், Gajendrakumar Ponnambalam இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது தொடர்பில் கடிதம் […]

விளையாட்டு

கொழும்பில் நாளை ‘கிரிக்கெட் போர்’!

  • February 14, 2026
  • 0 Comments

  T-20 உலகக்கிண்ண தொடர்பில் பங்கேற்கவுள்ள இந்திய அணி India இலங்கை வந்துள்ளது. T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதும் – ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். உலக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு அறிவித்திருந்தது. எனினும், இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளால் போட்டியில் […]

புகைப்பட தொகுப்பு

என் இனிய தனிமையே – அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

  • February 13, 2026
  • 0 Comments

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார் அனிகா சுரேந்திரன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அனிகா எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனிகா, தற்போது விடுமுறை இல்லமொன்றில்  எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அமைதியினான இரண்டு நாட்கள் என அவர் கெப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்

  • February 13, 2026
  • 0 Comments

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுடன் தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை  தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் […]

இலங்கை செய்தி

பாரியளவில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – இளைஞர்கள் இருவர் கைது

  • February 13, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரில் விசா ஆலோசனை மையம் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி, அதன் ஊடாக அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் பணமோசடி செய்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு வாக்குறுதியளித்தபடி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு […]

செய்தி தமிழ்நாடு

சேலத்தில் விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு – தவெக கூறுவது என்ன?

  • February 13, 2026
  • 0 Comments

தமிழகத்தின் சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தவெக விளக்கம் அளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் 1 மணியளவில் விஜய் உரையாற்ற தொடங்கினார். இதேவேளை, கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதனையடுத்து, பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், […]

உலகம் செய்தி

அமெரிக்கா–தைவான் வர்த்தக புரட்சி :வரிகள் குறையும், முதலீடு பெருகும்

  • February 13, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரியை உறுதிப்படுத்தும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே சமயத்தில், அமெரிக்காவின் பல பொருட்களுக்கு தைவான் வரிகளை குறைக்கும் அல்லது நீக்கும் திட்டத்தையும் ஒப்புக்கொண்டது. ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆண்டு வரை அமெரிக்க பொருட்களின் கொள்முதலை அதிகரிக்கும், இதில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், சிவில் விமானங்கள், இயந்திரங்கள்,  மற்றும் ஜெனரேட்டர்கள் அடங்கும். தைவானின் பொருளாதார மற்றும் தொழிற்சாலை வளர்ச்சிக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

“நாடாளுமன்றத்தை கொளுத்தவந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்”

  • February 13, 2026
  • 0 Comments

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. […]