இலங்கை செய்தி

T-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைபெறும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை விடுத்து பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த போட்டி தொடரின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு […]

இலங்கை

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

  • February 13, 2026
  • 0 Comments

அக்குரேகொடவில் சற்றுமுன் இடம்பெற்ற நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடிக்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.   அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வாகனத்தில் இருந்த இருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும் தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஒபாமா சகாப்தக் கொள்கையை இரத்து செய்தார் ட்ரம்ப்!

  • February 13, 2026
  • 0 Comments

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பொது சுகாதாரம் மற்றும் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்ற 15 ஆண்டுகால தீர்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது. இதன்மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் மத்திய அரசின் திறனை ட்ரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவன நிர்வாகி லீ செல்டினுடன் (Lee Zeldin)  இணைந்து தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த 15 ஆண்டுகால தீர்ப்பானது அமெரிக்க வாகனத் தொழிலை கடுமையாக சேதப்படுத்தியதாகவும், அமெரிக்க நுகர்வோருக்கு விலைகளை […]

உலகம் செய்தி

சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எல் கைதிகள் ஈராக்கிற்கு மாற்றம்

  • February 13, 2026
  • 0 Comments

ஈராக் அரசு, சிரியாவில் உள்ள சிறைகளில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எல் தொடர்புடைய கைதிகளை தனது நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றி வருவதாக அறிவித்துள்ளது. இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஈராக் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி வேண்டுகோளின் பேரில், ஈராக் இந்த கைதிகளின் இடமாற்றங்களையும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் முன்னெடுத்து வருகிறது என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அகமது லைபி தெரிவித்தார். சுமார் 3,000 கைதிகள்  மாற்றப்பட்டதாகவும், ஈராக் பல […]

ஐரோப்பா

போர் நிறுத்தம் கொண்டுவரப்படும்வரை தேர்தல் நடைபெறாது – ஜெலென்ஸ்கி திட்டவட்டம்!

  • February 13, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “மோசமான ஒப்பந்தத்தை” ஒரு பொது வாக்கெடுப்புக்காக முன்வைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களும் போர்நிறுத்தமும் நிறுவப்பட்ட பின்னரே உக்ரைன் தேர்தல்களை நடத்தும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். முனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதான ஒப்பந்தம், வாக்கெடுப்பு இரண்டிற்கும் உக்ரைன் தயாராக இருப்பதாக […]

இந்தியா

அரியணையேறுகிறார் தாரிக் ரஹ்மான்: பிரதமர் மோடி வாழ்த்து!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. Bangladesh Nationalist Party (BNP) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள தாரிக் ரஹ்மானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற 13வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் Tarique Rahman தலைமையிலான BNP கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளது. தாரிக் ரஹ்மான் , பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலீதா […]

இலங்கை செய்தி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி – நகைப்பிரியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (13) தங்கத்தின் விலை 5000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,750 இற்றும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் செய்தி

உக்ரைனுக்கு பிரான்ஸ் அமைச்சரின் விஜய நாளில் ரஷ்யா மாபெரும்  தாக்குதல் –  மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு

  • February 13, 2026
  • 0 Comments

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கியேவுக்கு விஜயம் செய்த நாளிலேயே, ரஷ்யா உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி 07ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதல், அதற்கு சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 03ஆம் திகதி NATO (நேட்டோ) பொதுச்செயலாளர் Mark Rutte (மார்க் ருட்டே) உக்ரைனுக்கு வந்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் எச்சரிக்கை அல்ல என்றும் திட்டமிட்ட இராணுவ மூலோபாயத்தின் ஒரு […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 01  முதல்  2.5  சதவீதம் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த வரி 2026 வரவு செலவு திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், தற்போது தீர்வு செயல்முறைக்கு உட்பட்ட வாகனங்களை இது பாதிக்காது என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் (VIASL) தெரிவித்துள்ளார்.  இந்த வரி இலங்கை சுங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஒரு வாகனத்தின் அதிக மதிப்பு […]

ஐரோப்பா செய்தி

பேச்சு சுதந்திரத்திற்கு மாபெரும் வெற்றி – பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு

  • February 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பலஸ்தீன ஆதரவு பிரச்சார அமைப்பான  பலஸ்தீன் ஆக்ஷன் (Palestine Action)  ஐ பயங்கரவாதக் குழு என வகைப்படுத்தி தடை செய்த அரசாங்கத்தின் முடிவு சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த முக்கிய தீர்ப்புக்கு பதிலளித்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி (Huda Ammori) இது  பிரித்தானியாவில் அடிப்படை சுதந்திரங்களுக்கும், பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கும் கிடைத்த பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தடை முடிவு, சமீபத்திய […]