இஸ்ரேல் போர் பதற்றம் : விமான சேவை ரத்து- ஏர் இந்தியா அறிவிப்பு
இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நேற்று காலை நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பல உயிரிழப்பும் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருப்பதாக அறிவித்த இஸ்ரேல், “ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது” என எச்சரித்து போரை தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையை எடுத்திருக்கும் அதே சமயம் ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கின்றன. […]













