இலங்கை

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களை தவிர்த்து நிகழ்வுக்கு சென்ற ஜனாதிபதி!

மட்டக்களப்புக்கு நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்லாமல் ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் நேற்றைய (07.10) தினம் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில்விக்ரசிங்க நேற்றும் (07.10) இன்றும் (08.10)  இரு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.  மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்றுவருகின்றார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 23நாட்களாக போராடிவருகின்றனர். இதனால் குறித்த வீதியூடாக பயணிக்காமல், அவர்களை தவிர்த்து சென்றது விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இதற்கிடையே குறித்த வீதியில் பெருமளவிலான பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.  பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அடிக்கடி ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடிச்சென்றதை காணமுடிந்தது.

இந்த நிலையில் திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் கூடாரத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர். இதன்போது திடீரென பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் ஓடிஒளிந்துசெல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கமுடியும் என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content