தென் அமெரிக்கா

பிரேசிலில் மகளிடம் அத்துமீறிய கணவரை கட்டி வைத்து மனைவி செய்த கொடூரம்!

  • December 30, 2023
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்த நிலையில் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி […]

இலங்கை

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

  • December 30, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம். எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க […]

ஐரோப்பா

மைனஸ் 50 டிகிரி குளிரில் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் உயிருக்கு போராட்டம்!

  • December 30, 2023
  • 0 Comments

கடும் குளிரில் அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸ் சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்தபடி பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியா நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் ஓரான் நகருக்கு நேற்று ஏர் அல்ஜீரி விமானம் புறப்பட்டுச் சென்றது. சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமான ஊழியர்கள் தொழில்நுட்ப சோதனைகளில் ஈடுபட்டனர். அதில் விமானத்தின் சக்கரத்துக்குள் உயிருக்கு […]

இலங்கை

இலங்கை : 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது

நள்ளிரவுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1,554 சந்தேக நபர்களில் 82 பேரிடம் பிடியாணை உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் 590 கிராம் ஹெரோயின், 1 கிலோ 300 கிராம் ஐஸ், 6 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் […]

உலகம்

கலிஃபோர்னியா கடற்பரப்பில் இராட்சத அலைகள் மேல் எழுந்ததால் பீதி!

  • December 30, 2023
  • 0 Comments

கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் எட்டுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசுபிக் பெருங்கடலில் வீசும் புயல் காரணமாக இவ்வாறாக கடல் அலைகள் மேல் எழுந்ததாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை இவ்வாற இறுதிவரை நீட்டிக்கும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். தேசிய வானிலை சேவை (NWS) கடற்கரையில் சில இடங்களில் அலைகள் 40 அடி (12 மீட்டர்) உயரத்தை எட்டும் என்றும், கடற்கரைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், தடுப்புகளை கவனிக்கவும் […]

உலகம்

இனியும் தாமதிக்காமல் காங்கிரஸர் முன்வர வேண்டும்: ஜோ பிடன் கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், காங்கிரஸை “முடுக்கிவிட வேண்டும்” மற்றும் உக்ரைனுக்கு உதவிகளை அனுப்புவதில் பிளவுகளை முறியடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். பாரிய ரஷ்ய விமானத் தாக்குதல் மேற்கத்திய சார்பு நாட்டை “அழிக்க” கிரெம்ளின் நம்புகிறது என்பதை நிரூபித்ததாகக் கூறியுள்ளார், பிடென் ஒரு அறிக்கையில் “புத்தாண்டில் காங்கிரஸ் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், உக்ரைன் தனது மக்களைப் பாதுகாக்க தேவையான ஆயுதங்கள் மற்றும் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து அனுப்ப முடியாது. இனியும் தாமதிக்காமல் காங்கிரஸார் […]

இலங்கை

இலங்கையில் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் : 150இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

  • December 30, 2023
  • 0 Comments

இந்த வருடம் இணையத்தில் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப்பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி தெரிவித்தார். தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களினால் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

“அவனை வாழ விடுங்க”செம்ம கடுப்பில் சாண்டியின் முன்னாள் மனைவி

  • December 30, 2023
  • 0 Comments

தனது தனித்துவமான நடிப்பால் வெள்ளித்திரையில் புகழ்பெற்ற நடிகை தான் காஜல் பசுபதி, சில தினங்களுக்கு முன்பு தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறி பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் காஜல் பசுபதி. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து […]

இலங்கை

இலங்கையில் வடக்கு ரயில்வேயின் அபிவிருத்தி பணிகள் : பந்துல குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

வடக்கு ரயில்வேயின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தியின் போது விசேட பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். வடக்கு ரயில்வேயை நவீனமயமாக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து, அதன்படி, இந்திய கடன் திட்டத்தின் கீழ், இந்திய எகான் நிறுவனம் மேற்கொண்ட நவீனமயமாக்கல் பணிகளுக்காக செய்யப்பட்ட முதலீட்டின் மதிப்பு 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் […]

இந்தியா

நெல்லையில் நடிகர் விஜய்யை காண கூடிய இரசிகர்களால் பரபரப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

நெல்லையில் நடிகர் விஜையை  காண ஒன்றுத்திரண்ட ரசிகர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து இரசிகர்கள் உள்ளே வர முயற்சித்தமையால்,  மண்டபத்தின் இருபுறமும் கயிறு கட்டி ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை நிர்வாகிகள் முன்னெடுத்தனர். டோக்கன் வைத்திருக்கும் பயனாளிகள் மட்டும் மண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதால் ரசிகர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே வர முயற்சி செய்துள்ளனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.