விளையாட்டு

பாலியல் வழக்கில் நேபாள வீரர் குற்றவாளி என அறிவிப்பு

  • December 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது […]

ஐரோப்பா

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய பாரிய வான்வழித் தாக்குதலுக்கு பதிலளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். “இன்று, ரஷ்யா தனது ஆயுதக் கிடங்கில் ஏறக்குறைய அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளது” என்று உக்ரைன் ஜனாதிபதி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ரஷ்யா சுமார் 110 ஏவுகணைகளை ஏவியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ரஷ்ய பயங்கரவாதம் கண்டிப்பாக தோற்கடிக்கப்படும்” என்று உக்ரைனின் ஜனாதிபதி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம்

2023 இல் அமெரிக்க விசா மற்றும் குடியேற்ற கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

  • December 30, 2023
  • 0 Comments

2023 இல் அமெரிக்க விசா மற்றும் குடியேற்ற கொள்கைகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய EB-5 மற்றும் H-1B கொள்கையில் மாற்றங்கள் முதல் மாணவர் விசாக் கொள்கைகளில் முக்கியமான புதுப்பிப்புகள் வரை, அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருகிறது. H-1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் விசாக்களை வெளியுறவுத் துறைக்கு எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பதும், ஒரு பைலட் திட்டமாக அமெரிக்காவிற்கு வெளியே பயணிக்க வேண்டியதில்லை என்பதும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டு செய்யப்பட்ட சில முக்கியமான […]

இலங்கை

இலங்கையில் VAT வரி அதிகரிப்பு: Dialog நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதன் காரணமாக, அனைத்து மொபைல், மொபைல் பிராட்பேண்ட், கட்டண தொலைக்காட்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கு பொருந்தும் வரிகள் அதற்கேற்ப, 01/1 /2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. Dialog Axiata ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு Vat விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக விலைகள் எவ்வாறு மாறும் என்பது குறித்த குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”அரசாங்கம் அறிவித்ததன் படி பெறுமதி சேர் வரி (VAT) […]

இலங்கை

திருகோணமலையில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • December 30, 2023
  • 0 Comments

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் இன்று (30.12) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய […]

ஐரோப்பா

கருங்கடலில் கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் ரஷ்யா

ஆக்கிரமிக்கப்பட்ட தீபகற்பத்தில் உக்ரைன் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால், இப்போது ஜனாதிபதி புடின் முதன்மையான கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். கிரிமியாவை புடின் இணைத்துக் கொண்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அங்கு கடற்படையின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ரஷ்யா தனது கப்பல்களை மேலும் சேதப்படுத்தும் பாதையில் இருந்து நகர்த்துவதற்கு தயாராகியுள்ளது. கருங்கடல் கடற்படையின் இருப்பிடம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்கவில்லை, உக்ரேனிய ஆயுதப்படைகளின் கூற்றுப்படி, உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பிற்கு புடின் உத்தரவிட்டதிலிருந்து ரஷ்யா குறைந்தது 20 […]

இலங்கை

இலங்கையில் தவறுதலாக செலுத்தப்பட்ட வாயுவால் பறிபோன உயிர்!

  • December 30, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆக்சிஜனுக்கு பதிலாக கரியமில வாயு கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.  

இலங்கை

இலங்கைக்கு டிசம்பர் மாதம் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

  • December 30, 2023
  • 0 Comments

இந்த டிசம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கு இருந்தது, இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் பல பாடசாலைகளை சுற்றி போதைபெருள் மீட்பு

  • December 30, 2023
  • 0 Comments

பாடசாலையைச் சுற்றியுள்ள 500 மீற்றர்களை சோதனையிட்ட போது போதைப்பொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 3,183 பாடசாலைகளை இலக்கு வைத்து, குறித்த பாடசாலைகளை சுற்றியுள்ள 500 மீட்டர் தூரம் வரை இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 217 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சோதனையின் போது 95 கிராம் ஹெரோயின், 7130 கிராம் கஞ்சா, 85 சட்டவிரோத சிகரெட், 16,561 போதை மாத்திரைகள், 48 கிராம் ஐஸ் […]

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் – இ.சாணக்கியன்

  • December 30, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை என்று அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29) வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தெரிவிக்கையில்,”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு நான் அறிந்தவரையில் திட்டமிட்டபடி ஐனவரி […]