இலங்கை

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்.

எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சு மேற்கொள்ள முடியாது. அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஒரு தாயார் இருக்கும் வரை எமது தொடர் போராட்டம் தொடரும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content