இலங்கை

பதுளை பொது வைத்தியசாலையில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் !

  • January 11, 2024
  • 0 Comments

சுகாதார தொழிற்சங்கங்ள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.வைத்தியர்கள், தாதியர்களின் சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையின் கனிஷ்ட நிலை ஊழியர்கள் இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும், எஞ்சிய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும், அவசர சிகிச்சைச் […]

இலங்கை

காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் : பலி எண்ணிக்கை 23000ஐக் கடந்தது!

  • January 11, 2024
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 23,357 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாக்குதல்களில் 59,410 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களில் 147 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 243 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த தற்கொலை எண்ணம்… இறுதியில் என்ன நடந்தது?

  • January 11, 2024
  • 0 Comments

கோலிவுட்டில் இளையராஜாவுக்கு எதிராக களமிறக்கிவிடப்பட்டவர் தான் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை பிரமிக்கவைத்த இவர், அதன் பின் பல ஹிட் ஆல்பம் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய அம்மா, “நீ மற்றவர்களுக்காக வாழும் […]

இலங்கை

இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • January 11, 2024
  • 0 Comments

வற் வரி காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, வாகனங்களின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், மகிழுந்து உதிரிபாகங்களுக்கு 15% ஆக இருந்த வற் 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

ஸ்ரீவித்யா, கமல்ஹாசன் காதல்… திருமணம் நடக்காமல் போனதற்கு இதுதான் காரணம்..

  • January 11, 2024
  • 0 Comments

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசனின் காதல் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஸ்ரீவித்யா ஒருபக்கம் எனது அம்மா கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை, எனவே நாங்கள் பிரிந்துவிட்டோம், ஆனால் அவர் கல்யாணம் செய்த விஷயம் கேட்டு வருத்தமடைந்ததாக கூறியிருந்தார். கமல்ஹாசன் ஒரு பேட்டியில், அவர் எனது காதலி தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் திருமணத்தில் தான் முடியவில்லை என்றார். கமல்-ஸ்ரீவித்யா காதல் திருமணத்தில் முடியாததற்கு காரணமே நடிகையின் அம்மா தான். […]

வாழ்வியல்

கண் அழுத்தத்தை குறைக்க செய்ய வேண்டிய மாற்றங்கள்

  • January 11, 2024
  • 0 Comments

கண்களை போதுமான அளவு கவனிக்காமல் இருக்கும் நாம், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களால் கண் அழுத்தத்தை குறைக்கலாம். டிஜிட்டல் சகாப்தத்தில் வாழும் நமக்கு, கேஜெட்டுகள் இல்லாமல் செய்வது சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் டிவிகள் மற்றும் டேப்லெட்டுகள் வரை நம் கண்கள் தொடர்ந்து டிஜிட்டல் திரைகளினால் பாதிக்கப்படுகின்றன. வேலை தேவைகளுக்கு ஏற்ப ஒன்பது முதல் பத்து மணி நேரம் வரை டிஜிட்டல் திரையை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய […]

இலங்கை

இலங்கையில் வீடொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் தாய் மரணம்

  • January 11, 2024
  • 0 Comments

ஹிகுராக்கொட நெல்லி வீதியில் வீடொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயான ரசிகா சாமோதனி என்பவரே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வயதுடைய மகளும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனமழையின் போது களிமண் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

பொழுதுபோக்கு

“கங்குவா படத்திற்காக எனது கடைசி ஷாட்” சூர்யா கொடுத்த அப்டேட்…

  • January 11, 2024
  • 0 Comments

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் “கங்குவா” படம் பத்து மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இதில் நடிகர் சூர்யா, திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 3டி முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கங்குவா படத்தில் தனக்கான காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில் படப்பிடிப்பு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய குடியுரிமை தேர்வில் பெரும்பாலானோர் தோல்வி

  • January 11, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய குடியுரிமை தேர்வில் ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலிய குடியேறியவர்களில் மூன்று பேர் தோல்வியடைந்துள்ளனர். 20 கேள்விகள் கொண்ட வினாத்தாளில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 75 மதிப்பெண்கள் கட்டாயமாகும். இதில் ஆஸ்திரேலிய மதிப்புகள், அரசியலமைப்பு மற்றும் வாக்கெடுப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் 20 பல தேர்வு கேள்விகள் உள்ளன. 2022 கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சுமார் 288,000 புலம்பெயர்ந்தோர் ஆஸ்திரேலிய குடியுரிமைத் தேர்வில் பங்கேற்றுள்ளனர், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தோல்வியடைந்துள்ளனர். வினாத்தாள் வடிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக குறித்த […]

செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் சட்டம்!

  • January 11, 2024
  • 0 Comments

இலங்கை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளைச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை பொருட்படுத்தாமல் வந்து செல்வதை அவதானித்ததையடுத்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சுற்றறிக்கையின்படி, அரசு அலுவலகங்கள் பிற்பகல் 3:00 […]