ஆசியா

இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு விசாரணை ஆரம்பம்

இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டி சர்வதேச நீதிமன்றம் வாதங்களைக் கேட்கும் நிலையில், காசாவில் போர் தொடர்பான சட்ட விசாரணை ஹேக்கில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. . தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு தற்காலிக நீதிபதிகள் தங்கள் ஆணித்தரமான அறிவிப்புகளுடன் இந்த வழக்கு தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த டிக்காங் மொசெனெகேவும் , நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் அஹரோன் பராக் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்தவும் உள்ளனர். காசாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் […]

இலங்கை

வெகு சீக்கிரத்தில் பெரும்பான்மையை இழக்கும் இலங்கை அரசாங்கம் !

  • January 11, 2024
  • 0 Comments

அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் பெரும்பான்மையை இழக்கும் எனவும், அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் சமகி ஜன கூட்டமைப்பில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு 113 பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க நேரிடும் என தெரிவித்த அவர், அதற்கமைவாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார ரீதியில் திவாலாகி இறுதியில் அப்பாவி மக்களைச் செங்கடலின் பாதுகாப்பிற்காக பெருமளவு […]

இலங்கை

இலங்கை : வழமைக்கு திரும்பும் காலி சிறைச்சாலை நடவடிக்கைகள்!

  • January 11, 2024
  • 0 Comments

கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எட்டு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இதுவரை நால்வர் குணமடைந்துள்ளதுடன், சிறைச்சாலையின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன், ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்!

  • January 11, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று (11.01) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார். மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆசியா

தைவானின் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த வேண்டும் : ஹு யு-இஹ் வலியுறுத்தல்!

  • January 11, 2024
  • 0 Comments

சீனாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த விரும்புவதாக எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஹு யு-இஹ் தெரிவித்துள்ளார். நியூ தைபே நகரில் நடந்த செய்தி மாநாட்டின் போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போரின் செலவை அவர்கள் ஏற்க வேண்டும் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பை வலுப்படுத்துவதைத் தவிர, பெய்ஜிங்குடன் உரையாடலை மறுதொடக்கம் செய்வதாகவும்  ஹூ உறுதியளித்தார். பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் […]

பொழுதுபோக்கு

கமல் அதிரடி முடிவு… கைவிடப்படும் படங்கள்! இனி அவ்ளோ தான்…

  • January 11, 2024
  • 0 Comments

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். 1981ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போதும் வெற்றிகரமாக பல படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இனி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் படங்கள் தயாரிக்கப் போறதில்லை என கமல் முடிவு செய்துள்ளாராம். விஸ்வரூபம், தூங்காவனம், உத்தம வில்லன் போன்ற படங்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் வெளியாகி தோல்வியடைந்தன. இதனால் துவண்டு கிடந்த கமலுக்கு விக்ரம் திரைப்படம் மூலம் தரமான […]

இலங்கை

இலங்கை : தென்கிழக்கு பல்கலைக்கத்தின் அனைத்து பீடங்களையும் மூட நடவடிக்கை!

  • January 11, 2024
  • 0 Comments

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, மறு அறிவித்தல் வரை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் கற்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் கற்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் இரு நாட்களில் இரண்டு வயது குழந்தை உள்பட 10 பேர் மாயம்!

  • January 11, 2024
  • 0 Comments

கடந்த இரு தினங்களில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவர்.குறித்த சிறுமியும் முப்பது வயதுடைய அவரது தாயாரும் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அந்த பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் என்று கூறப்படுகிறது. கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை […]

ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக்குடன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு…

  • January 11, 2024
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை நேற்று சந்தித்து இரு நாடுகளிடையே உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசித்தார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரிட்டனுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகுச் செல்லும் பயணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்துப் பேசினார். […]

ஆசியா

சீனாவிற்கும் – மாலைத்தீவிற்கும் இடையில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

  • January 11, 2024
  • 0 Comments

சீனாவிற்கும் – மாலைத்தீவிற்கும் இடையில் ஏறக்குறைய 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முய்ஸு, சீனாவுக்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டு, சென்றிருந்த நிலையில், அந்நாட்டு அதிபர் ஜு – ஜின்பிங்குடன் இடம்பெற்ற சந்திப்பில் குறித்த ஒப்பந்தங்கள் குறித்து கையெழுத்தாகியுள்ளது. இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இரு தரப்பும் அளிக்கும் பெரும் முக்கியத்துவத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. மாலத்தீவின் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை ஆராய்வதில் சீனா மதிக்கிறது என்றும் ஆராய்கிறது என்றும் ஜு – […]