இலங்கை

இலங்கையில் நீரில் மூழ்கிய புகையிர வீதிகள் : பல இரயில்கள் இரத்து!

  • January 11, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு – திருகோணமலை ரயில் பாதையில் புனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதி நீரில் மூழ்கியமையினால் அந்த பாதையின் போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (11.01) கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் இரண்டு இரவு அஞ்சல் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (12.1) காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு செல்லும் உதயாதேவி […]

ஆசியா

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடந்த திட்டம் : இருவர் கைது

நாட்டின் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து “பயங்கரவாத தாக்குதல்களை” நடத்த திட்டமிட்டிருந்த இஸ்லாமிய அரசு குழுவின் இரண்டு பாலஸ்தீனிய ஆதரவாளர்களை கைது செய்ததாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெருசலேமில் வசிப்பவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து வெடிக்கும் சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இருவரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் எல்லைப் போலீஸ் படைக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை

லண்டனில் யாழ் – காரைநகரை சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • January 11, 2024
  • 0 Comments

தென்மேற்கு லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது […]

உலகம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • January 11, 2024
  • 0 Comments

ஐவரி கோஸ்ட் செல்லும் விமானம் ஒன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜான்கோ, இன்ஸ்டாகிராமில் இந்த விபத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அறிவித்து, சம்பவத்தின் வீடியோ பதிவைப் பகிர்ந்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் தூங்கிவிட்ட நிலையில், பயணிகள் தலைவலி மற்றும் தலைச்சுற்றலால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் “சவுதி அரேபியாவிலிருந்து (பயிற்சி முகாம்) காம்பியாவிற்கு இஸ்தான்புல் மற்றும் […]

வட அமெரிக்கா

கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு!!

  • January 11, 2024
  • 0 Comments

கனடாவில் உள்ள டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி ஏர் கனடா விமான நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் இருந்த பயணி ஒருவர் அமர்வதற்கு பதிலாக, விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென விமானத்தின் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்திருக்கிறார். 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் […]

இந்தியா

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு இந்தியாவிற்கு கிடைத்த இடம்

உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற பாஸ்போர்ட்டுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியலில்ன் இந்தியா 80-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் […]

இலங்கை

இலங்கையில் நீர் கட்டணமும் குறைக்கப்படும் – ஜீவன் தொண்டமான்!

  • January 11, 2024
  • 0 Comments

மின் கட்டணத்தில் எதிர்பார்க்கப்படும் குறைப்புடன், நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில் இன்று (11.01) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. “இனிமேல் தண்ணீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை. தண்ணீரை […]

இலங்கை

மலையகத்தில் விறகு தேடிச்சென்றவர் ஓடையொன்றிலிருந்து சடலமாக மீட்பு..!

  • January 11, 2024
  • 0 Comments

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில் தோட்டம் 2 ம் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய சுப்புன் நாமல் என்பவர் புதன்கிழமை (10) மதியம் 11 .30 மணியளவில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பாததால் இது தொடர்பில் அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளார். அதற்கமைய பொலிஸார் ஈடுபட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கெனில் தோட்டம் 2 ம் பிரிவு வன பகுதியில் உள்ள ஓடையொன்றிலிருந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் இன்று 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • January 11, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா ஆகிய நகரங்களில் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினர். அதேபோல் இந்தியாவில் வட மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து […]

வட அமெரிக்கா

கியூபாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி… 500 சதவீதம் உயரவுள்ள பெட்ரோல் விலை!

  • January 11, 2024
  • 0 Comments

கியூபாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோலின் விலையை 500 சதவீதம் உயர்த்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்கா அருகில் உள்ள குட்டித் தீவான கியூபாவில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்திற்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உள்நாட்டில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் பெரும்பான்மையான சேவைகள் அரசு சார்ந்தது என்பதால் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் […]