இலங்கை

தைத்திருநாளை முன்னிட்டு இலங்கையில் விசேட வழிபாடுகள்

  • January 15, 2024
  • 0 Comments

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன. […]

உலகம்

எதிர்பாராத மற்றும் விவரிக்க முடியாத சமிக்ஞை – நாசாவின் கண்டுபிடிப்பு

  • January 15, 2024
  • 0 Comments

நமது விண்மீன் மண்டலத்திற்கு வெளியே இருந்து எதிர்பாராத மற்றும் விவரிக்க முடியாத சமிக்ஞையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு வெளியே இருந்து வரும் எதிர்பாராத சமிக்ஞையை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதை அவர்களால் விளக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் Gamma-ray  விண்வெளி தொலைநோக்கியில் இருந்து 13 வருட தரவுகளை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தபோது மர்மமான சமிக்ஞையை அவர்கள் கவனித்தனர். இது “எங்கள் விண்மீன் மண்டலத்திற்கு வெளியே எதிர்பாராத மற்றும் இன்னும் விவரிக்கப்படாத அம்சம்  […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலை யாரும் தடுக்க முடியாது – நெதன்யாகு

  • January 15, 2024
  • 0 Comments

தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸா போரில் வெற்றி கிடைக்கும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்படுவதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸை முற்றிலும் அழிக்கும்வரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இஸ்ரேலை தடுக்க முடியாது என்றார். காஸா போர் தொடங்கி 100 நாட்கள் ஆகிவிட்ட […]

செய்தி

இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து – உடனே பரிசோதித்து பார்க்க வேண்டும்

  • January 15, 2024
  • 0 Comments

நீரிழிவு நோய் ஒரு தீவிர நோயாகும். முன்னர் வயதானவர்களையே அதிகம் ஆட்கொண்டு வந்த இந்த நோய் இப்போது அனைத்து வயதினரையும் பரவலாக தாக்கி வருகிறது. இதற்கான நிரந்தரமான மற்றும் துல்லியமான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்ற தவறுகளால், உயர் இரத்த சர்க்கரை அளவு என்னும் நீரிழிவு நோய் இப்போது மிகவும் பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. சர்க்கரை நோய் ஒரு நாள்பட்ட நோய் என்றும், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தந்தையின் கார் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த கதி

  • January 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தந்தையின் கார் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சிட்னியின் துங்காபி பகுதியில் வசித்து வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தந்தை தனது காரை வீட்டின் முன் திருப்பும்போது சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார். தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது குழந்தையும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் அவர் அருகில் குழந்தை நின்றதை அவர் அவதானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சிறுமியின் தந்தை […]

ஐரோப்பா

இத்தாலியில் திருமண விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்பு – 30 பேர் காயம்

  • January 15, 2024
  • 0 Comments

இத்தாலியில் திருமண விருந்து நிகழ்ச்சியின் போது தரை உடைந்ததால் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முன்னாள் Tuscan convent கட்டடத்தில் அந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது. சுமார் 60 பேர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது தரை உடைந்து கீழே இருக்கும் விருந்தினர் அறைக்குள் விழுந்ததாக இத்தாலிய ஊடகங்கள் கூறின. பொலிஸார் தீயணைப்புக் குழுவினர் உள்ளிட்ட 100க்கும் அதிகமான அவசரப்பணி ஊழியர்கள் சம்பவ […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலைக் குழம்பு வெளியேறியதால் தீக்கிரையான வீடுகள்

  • January 15, 2024
  • 0 Comments

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜான் தீபகற்பத்தில் உள்ள கிரின்டாவிக் நகருக்கு அருகே எரிமலை வெடித்ததை அடுத்து பாய்ந்த எரிமலைக் குழம்பு காரணமாக ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. நேற்று அதிகாலை ஏற்பட்ட எரிமலைக் குழம்பு காரணமாக நகருக்குச் செல்லும் பிரதான வீதியும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் முதல், 20,000 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, மேலும் எரிமலை வெடிக்கும் அபாயம் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டது மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எரிமலைக்குழம்பு வெளியேறுவதைத் தடுக்க […]

ஆசியா

தாய்லாந்தில் மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் புதிய வைரஸ்

  • January 15, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது வௌவால்களால் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய வைரஸ் என கூறப்படுகின்றது. தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வவ்வால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க்கில் உள்ள அரசு சாரா சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் பீட்டர் தசாக், உலக சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வுஹானில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் குழுவால் தொடர்புடைய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தினால் காத்திருக்கும் ஆபத்துகள்!

  • January 15, 2024
  • 0 Comments

அதிகப்படியான இணையப் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றால், 2024ல் பெரும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என உலகப் பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் இணையப் பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களும் நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024 இல் ஏஐ தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியான சரிவு, […]

ஐரோப்பா

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 5 அகதிகள் மரணம்

  • January 15, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 5 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு பா-து-கலே – Wimereux கடற்பகுதியில் இருந்து அகதிகள் சிலர் சிறிய படகு மூலம் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்டனர். சிறிய தூரம் பயணப்பட்ட நிலையில், பயணத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் படகு மூழ்க ஆரம்பித்துள்ளது. மீட்புப்பணி அழைக்கப்படுவதற்குள் நிலமை கைமீறிச்சென்றுள்ளது. Abeille Normandie கடற்படையினர் தலையிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், நான்கு அகதிகள் […]