மத்திய கிழக்கு

இஸ்ரேலை யாரும் தடுக்க முடியாது – நெதன்யாகு

தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸா போரில் வெற்றி கிடைக்கும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்படுவதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸை முற்றிலும் அழிக்கும்வரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இஸ்ரேலை தடுக்க முடியாது என்றார்.

காஸா போர் தொடங்கி 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளனர் என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும் தொலைக்காட்சி உரையில் நெதன்யாகு குறிப்பிட்டார்.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.