இலங்கை

யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் – காதலன் எடுத்த விபரீத முடிவு!

  • April 16, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த தாயும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்ற 37 வயதான இளைஞன் அப்பகுதியில் உள்ள காணியொன்றில் வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இரண்டு சம்பவத்திற்கும் காதல் […]

ஐரோப்பா

மத்திய கிழக்கு காட்டிய அதே ஒற்றுமையை உக்ரைனுக்கும் காட்டுமாறு நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

ஈரானிய தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலுக்கு உதவுவதில் அவர்கள் காட்டிய அதே ஒற்றுமையை உக்ரைனுக்கும் காட்டுமாறு நட்பு நாடுகளுக்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான ரஷ்ய தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வான் பாதுகாப்புக்கான புதிய வேண்டுகோளை உக்ரேனிய ஜனாதிபதி வெளியிட்டார். உக்ரைனின் வானில் ட்ரோன்கள் மத்திய கிழக்கின் வானத்தைப் போலவே ஒலிக்கின்றன. சுட்டு வீழ்த்தப்படாவிட்டாலும் எல்லா இடங்களிலும் வெடிகுண்டுகள் ஒரே மாதிரியாக இருக்கும். உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பை அனுப்ப மேற்கத்திய நட்பு […]

உலகம்

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெஸ்லா நிறுவனம்!

  • April 16, 2024
  • 0 Comments

டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டெஸ்லாவின் உரிமையாளர் எலோன் மஸ்க். தயக்கத்துடன் இருந்தாலும் முடிவெடுக்க வேண்டும்  எனக் கூறினார். கடந்த டிசம்பர் வரை, சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளரான டெஸ்லாவில் 140,473 ஊழியர்கள் பணியாற்றினர். அவர்களில்  10% பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரிக்கான வேலை வாய்ப்பு : இன்று மற்றும் நாளை நேர்முகத்தேர்வு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணைப் பொலிஸில் இலங்கையர்களுக்கான 200 வெற்றிடங்களை அறிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (16) மற்றும் நாளை (17) நாவலில் உள்ள SLFEA அலுவலகத்தில் நடைபெறும் என SLFEA யினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://forms.gle/8DzuH5LUooxg4czE6 இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, நேர்காணலுக்காக அவர்களின் பாஸ்போர்ட்டுடன் கல்வி பொது தரா தர உயர்தர பரீட்சை சான்றிதழ் அல்லது IELTS சான்றிதழைக் கொண்டு […]

ஆசியா

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம்

  • April 16, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த வாரம் 9ம் திகதி மேற்கு பப்புவா மாகாணத்தில் […]

ஐரோப்பா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • April 16, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பொலிஸ் பாதுகாப்பிற்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் மற்றுமொரு பின்னடைவை சந்துள்ளது. இளவரசர் ஹரியின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க குழுவின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரண்மனை பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அவர்களுக்கான ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பல்வேறு  சவால்கள் தோன்றியுள்ளன. பலகட்ட விவாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற நீதிபதி பீட்டர் லேன் பிப்ரவரியில் bespoke பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் தீர்ப்பளித்தார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், U.K. வாதிகளுக்கு மேல்முறையீடு […]

மத்திய கிழக்கு

ஓமானில் சீரற்ற வானிலையால் 17 பேர் உயிரிழப்பு!

  • April 16, 2024
  • 0 Comments

ஓமானில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அரேபிய தீபகற்பத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சீற்ற வானிலையால் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம்… அதுக்கும் மேல… என்னங்க சொல்லுறீங்க?

  • April 16, 2024
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை முடித்த ரேஷ்மா பசுபுலேட்டி, ஆரம்ப காலத்தில் சாஃப்ட்வேர் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்தார். அதன் பிறகு சின்னத்திரை நாடகங்களில் அறிமுகமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “மசாலா திரைப்படம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்பொழுது வரை மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து […]

இலங்கை

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

  • April 16, 2024
  • 0 Comments

கல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொருபன இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத இருவர் வந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (16) அதிகாலை வேளையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசியா

மியான்மரில் ராணுவ தளபதி கலந்து கொண்ட விழாவில் மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல்: நால்வர் பலி

  • April 16, 2024
  • 0 Comments

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் […]