அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் சாத்தியம்
வாகன இறக்குமதிக்கான தடையை அடுத்த வருட ஆரம்பத்தில் நீக்குவதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு திறைசேரிஅதிகாரிகளைக் கொண்ட குழு எதிர்வரும் வாரத்தில் முன்வைக்கத் தயாராகும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடை நீக்கப்படும் என அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார். வாகன இறக்குமதி தடையை நீக்குவதா இல்லையா என்பது […]













