இலங்கை செய்தி

உமா ஓயா திட்டத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து நாளை ஆய்வு

உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று நாளை விசேட அவதானத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் வகையில், மலையகத்தில் அதிகளவு தேங்கும் நீரை குறுகிய கால முறைகள் மூலம் கீழே இறக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

தற்போது, ​​எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மலித்தகொல்ல என்ற சாய்வான பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீர் நிரப்பப்படுவதனால் நீர் பாய்ந்து செல்லும் நிலையும் மண்சரிவுக்கான அறிகுறிகளுடன் வண்டல் மண் படிந்துள்ளமை குறித்து பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், நீரியல் அல்லது புவியியல் ஆய்வுகளால் இது உறுதிப்படுத்தப்படவில்லை என பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, பதுளை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் இன்று அப்பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content