ஐரோப்பா

ரஷ்யாவை குறிவைத்து நூற்றுக்கணக்கான பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி

உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யாவை குறிவைத்து அமெரிக்கா நூற்றுக்கணக்கான புதிய பொருளாதார தடைகளை வெளியிட்டது, இது சீனா உட்பட மேற்கத்திய நடவடிக்கைகளை மாஸ்கோவின் நோக்கத்தை இலக்காகக் கொண்டது. அமெரிக்க கருவூலத் திணைக்களம் கிட்டத்தட்ட 200 இலக்குகள் மீது தடைகளை விதித்துள்ளது, கருவூலச் செயலர் ஜேனட் யெல்லென் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரின் சமீபத்திய பயணங்கள் உட்பட, ரஷ்யாவின் இராணுவத்திற்கு சீனாவின் ஆதரவு குறித்து வாஷிங்டனில் இருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, […]

செய்தி விளையாட்டு

IPL Match 50 – 201 ஓட்டங்கள் குவித்த ஐதராபாத் அணி

  • May 2, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ரன்னிலும் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி […]

இலங்கை

இலங்கை: திருகோணமலையில் சட்டவிரோத விடுதியொன்றினை நடாத்தி வந்த மூவர் கைது!

திருகோணமலை தம்பலகாமம்-பொலிஸ் பிரிவுக்கு கல்மெடியாவ பகுதியில் சட்டவிரோத விடுதியொன்றினை நடாத்தி வந்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (02) மாலை இடம் பெற்றுள்ளது. தம்பலகாமம் -கல்மெடியாவ பகுதியில் தேநீர் கடையொன்றினை நடாத்தி வருவதைப் போன்று சட்டவிரோத விடுதி நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தேநீர் கடையை சோதனையிட்ட போது தேநீர் கடைக்கு பின்னால் அரையொன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது […]

இலங்கை

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று(02) நடத்தப்பட்டுள்ளது. பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை! இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்து நேற்று விமான நிலையத்தில் அமைதியின்மை பதிவாகியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்குவதை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்வது தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதால், இந்தியாவைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் தேவையற்றது என்று கூறியுள்ளார். “கொழும்பு […]

இலங்கை

மே 13 முதல் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் மீள ஆரம்பம்

  • May 2, 2024
  • 0 Comments

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்வெளியில் இருந்து பூமிக்கு கிடைத்த மர்ம சமிக்ஞை : நாசா வெளியிட்ட தகவல்!

  • May 2, 2024
  • 0 Comments

ஆழமான விண்வெளியில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உருவான இந்த சிக்னல், நாசாவின் புதிய விண்கலமான “சைக்கிலிருந்து” வந்துள்ளது. அக்டோபர் 2023 இல், நாசா ஒரு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. ஒரு விண்கலத்தை ‘சைக் 16’ என்ற சிறுகோள் நோக்கி அனுப்பியது. இது முதன்மையாக உலோகத்தால் ஆனது என்பதுடன் நமது சூரிய குடும்பத்தில் அரிதானது. இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் […]

இலங்கை

யாழ்.காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபாட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து மேலும் தெரியவருவதாவது வழித்தட அனுமதி ,நேர அட்டவணை தொடர்பில் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அத்துமீறலை எதிர்த்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினால் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 40 வருடங்களாக காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கதில் காரைநகர் சிற்றூர்தி […]

பொழுதுபோக்கு

தளபதிக்கு NO, தலைக்கு OK சொன்ன ட்ரெண்டிங் நடிகை… வருத்தத்தில் ரசிகர்கள்!

  • May 2, 2024
  • 0 Comments

நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் அஜித்தின் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கோட்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறாமல் போனது.இதனால், அடுத்து வரக்கூடிய பாடல்களாவது கொண்டாட்டமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் […]

இலங்கை

முல்லைத்தீவில் காணி பிரச்சினை குறித்து 130 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணை!

  • May 2, 2024
  • 0 Comments

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , […]