சவுதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 73 பேர் காயம்
சவுதி அரேபியாவின் பல நகரங்களில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 73 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் உட்பகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஏமன் கிளர்ச்சிக் குழுவானது, ஜூலை மாதம் கடற்படை முற்றுகையை அறிவித்ததிலிருந்து, செங்கடலில் உள்ள கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, சவுதி அரேபியாவைத் தொடர்ந்து குறிவைத்து வருகிறது.
வளைகுடாவில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை நிறுவ தெஹ்ரான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை விரிவுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





