ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் வான்வெளியில் தென்பட்ட வால்மீன்! வைரலாகும் காணொளி

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) படி, சனிக்கிழமை பிற்பகுதியில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் ஒரு பிரகாசமான வால்மீன் துண்டு வானத்தில் தென்பட்டுள்ளது. திகைப்பூட்டும் காட்சி “ஒரு திரைப்படம் போல் உணர்ந்தது” என்று லிஸ்பன் குடியிருப்பாளர் ஒருவர் தனது அனுபவித்தை கூறியுள்ளார். மேலும் போர்த்துகீசிய எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு ஸ்பானிஷ் நகரமான Caceres இன் வானத்தில் “அதிர்ச்சியூட்டும் விண்கல்” என்று விவரித்ததை அதன் “ஃபயர்பால் கேமரா” மூலம் கைப்பற்றிய புதிய வீடியோவை ஞாயிற்றுக்கிழமை காலை, […]

இலங்கை செய்தி

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமர் தினேஷை சந்தித்தார்

  • May 19, 2024
  • 0 Comments

உலகளாவிய சமாதான தூதுவர், ஆன்மீக தலைவர், வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். அலரி மாளிகையில் நேற்று (18) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கையில் இலவச கல்வி நிலையங்களை நிறுவ தனது அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக குருதேவ் இங்கு குறிப்பிட்டுள்ளார். ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கும் விருப்பம் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் இரண்டு […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்

  • May 19, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர் புதன்கிழமை இரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றார். பின்னர் வியாழக்கிழமை காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! பலரை காணவில்லை என தகவல்

  • May 19, 2024
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், ஹெலிகாப்டரில் இருந்த பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? அல்லது […]

ஐரோப்பா

கார்கிவ் பகுதியில் பொதுமக்களை குறிவைத்து ரஷ்ய ஷெல் தாக்குதல்

சனிக்கிழமையன்று கார்கிவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு நகரங்களில் ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் பொதுமக்களை குறிவைத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 13 வயது சிறுமி, 16 வயது ஆண் மற்றும் 8 பேர் உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்த நிலையில், பிராந்திய தலைநகர் கார்கிவின் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய வான் தாக்குதல் நடத்தியதில் போர்க்குற்றமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக உக்ரைன் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்கோ வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பதை மறுக்கிறது, ஆனால் உக்ரைன் மீதான பிப்ரவரி 2022 ஆக்கிரமிப்பிலிருந்து […]

இலங்கை செய்தி

இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை மீனவர்கள் கைது

  • May 19, 2024
  • 0 Comments

கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் கன்னியாகுமரிக்கு அருகில் இந்தியக் கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்கள் வந்த  படகையும் இந்திய கடலோர காவல்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த 16ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்களும் 5 படகுகளும் இந்திய கடற்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளதாக […]

இலங்கை செய்தி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் மாற்றம்

  • May 19, 2024
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைமையில் நேற்று (18) கூடிய சுமார் ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தின், கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து கௌசல்ய நவரத்னவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கௌசல்ய நவரத்னவை சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக வேறொரு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை தலைமை பதவிக்கு நியமித்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் கடந்தகால கணக்கு அறிக்கைகளை அங்கீகரிக்காமல் நிராகரிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இது சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கறுப்பு நாளாக குறிப்பிடப்படும் […]

இலங்கை

இலங்கையில் வனப்பகுதிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இ.போ.ச சாரதி ..!

  • May 19, 2024
  • 0 Comments

நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவன் சதுரிக எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் இலங்கை போக்குவரத்து சபை சாரதி என விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருப்பதுடன், பிள்ளைகள் இருவரும் வேறொரு இடத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வருவதாகவும், குறித்த நபர் தனியாக […]

இலங்கை செய்தி

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை

  • May 19, 2024
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (20) மூட வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். நாளைய காலநிலைக்கு ஏற்ப எதிர்கால நாட்கள் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

செய்தி விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் நட்சத்திர வீரர் – அவுஸ்திரேலியாவில் குடியேற தீர்மானம்

  • May 19, 2024
  • 0 Comments

இலங்கையின் மூத்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தின் இறுதியில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. மூன்று வடிவங்களின் முன்னாள் கேப்டன் உலகக் கோப்பையின் முடிவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு குடிபெயர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஏற்கனவே மெல்போர்னில் சில வீடுகளை வாங்கியுள்ளார் எனவும் அவர் தனது இளம் குடும்பத்துடன் குடியேற விரும்புவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.