ஆஸ்திரேலியாவில் பொலிஸ் அதிகாரி மீது கூரிய ஆயுத்தால் பலமுறை தாக்குதல்!
காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று (19)பகல் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஹைட் பார்க் அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, சமையலுக்குப் பயன்படுத்தும் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியுடன் நபர் ஒருவர் வழிமறித்ததாக நம்பப்படுகிறது. அதிகாரிகளுக்கு அருகே சென்று எதுவும் பேசாமல் அதிகாரி தலையின் பின்பக்கத்தில் கத்தியைக் […]













