இந்தியா – தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை.. விமான நிலையத்தில் வைத்து கைது செய்த அதிகாரிகள்
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் கைதானார்.32 வயதான இவர், 14.8 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்த ரன்யா ராவ், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் நடித்தவர். மேலும் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் துபாய் சென்ற இவர், திங்கட்கிழமை இரவு எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு திரும்பினார். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அவர் அதிக […]













