இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 நபர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பு வெளியீடு!

  • May 23, 2026
  • 0 Comments

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும்  பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 226 நபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார். அவர்களில் ஏறக்குறைய 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 35 சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் […]

செய்தி

அமைதி முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு!

  • May 23, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார். மேற்கு ஆசிய போர் நிலைவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை இந்திய […]

உலகம்

நியூயார்க்கில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிப்பு சம்பவம் பதிவு!! 34 பேர் காயம்!

  • May 23, 2026
  • 0 Comments

நியூயார்க் நகர கப்பல் கட்டும் தளத்தில் நேற்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை  கட்டுப்படுத்தியுள்ளனர். நியூயார்க் தீயணைப்புத் துறை (FDNY), அபாயகரமான பொருட்கள் பிரிவு (Hazmat), மற்றும் நியூயார்க் நகர காவல்துறை (NYPD) உள்ளிட்ட பல்வேறு முகமைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதன்மை மீட்புப் பணியாளர்கள் களப்பணியாற்றியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நியூயார்க் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரான்சுக்குள் நுழைய இஸ்ரேல் அமைச்சருக்கு தடை!

  • May 23, 2026
  • 0 Comments

சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சர் Itamar Ben-Gvir பிரான்சுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வலர்களைக் கட்டிப்போட்டு ,அவர்கள் வதைக்குட்படுத்தப்படும் காணொளியை இவர் வெளியிட்டிருந்தார். இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சும் கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளது. இந்தச் செயல் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இத்தகைய வன்முறையைத் தூண்டும் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் NPP பிரதான அலுவலகம் திறப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அலுவலகம், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியின் இலக்கம் 295 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய பிரதான அலுவலகம், இன்று நண்பகல் 12 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் நாடா வெட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்சி அலுவலகத் திறப்பு விழாவில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன், கடற்றொழில் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வந்துள்ள EES திட்டம் – நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்!

  • May 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் மின்னணு (பயோ மெட்ரிக்) அமைப்பிலான சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் நீண்ட காத்திருப்புக்களை எதிர்கொள்கின்றனர். படகுப் பயணிகள் எல்லைச் சோதனைகளுக்காகத் துறைமுகத்தில் குறைந்தது 90 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பலர், துறைமுகத்திற்குள் நுழைவதற்கே கூடுதலாக இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது M20 மற்றும் A2 போன்ற சுற்றியுள்ள சாலைகளில் “முழுமையான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்துகிறது. கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சோதனை செய்யப்படும் EES செயற்திட்டம் காரணமாகவே நீண்ட […]

உலகம்

கலிபோர்னியாவில் இருந்து 40 ஆயிரம் பேர்  வெளியேற்றம்!!

  • May 23, 2026
  • 0 Comments

தெற்கு கலிபோர்னியாவில்  இரசாயண தொட்டியொன்று  எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அல்லது வெடிக்கும் நிலையில் உள்ளதாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்த  40 ஆயிரம் பேர்  வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த தொட்டியில் இருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து தீயைணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடதிற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அந்த தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது […]

உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று : திணறும் காங்கோ அரசு!

  • May 23, 2026
  • 0 Comments

உகாண்டாவில் புதிதாக மூன்று பேர் எபோலா தொற்றால் பாாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில், புண்டிபுக்யோ வகை எபோலாவின் தாக்கத்தால் ஏறக்குறைய 82 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேம் 177 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட 750 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைச்சகம் இந்த நோய்ப் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அவசரநிலையாக  அறிவித்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வரும் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதல் : இரகசிய கூட்டுப் பயிற்சியில் நேட்டோ நாடுகள்!

  • May 23, 2026
  • 0 Comments

நேட்டோவின் இங்கிலாந்து தலைமையிலான கூட்டு விரைவு எதிர்வினைப் படை (ARRC), நேசப் படைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது. இந்த பயிற்சிக்காக பயன்பாட்டில் இல்லாத சேரிங் கிராஸ் சுரங்கப்பாதை தளம் இரகசிய முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சிற்கு ‘ஆபரேஷன் ஆர்கேட் ஸ்ட்ரைக்’  (Operation Arcade Strike ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்போது  ரஷ்யாவிற்கு எதிராக ‘ஆழ்கடல் தாக்குதல்’ நடவடிக்கைகளை உருவகப்படுத்தும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. […]

இந்தியா

தீ விபத்துக்கான சமிக்ஞை : ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

  • May 23, 2026
  • 0 Comments

பெங்களுருவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவசர நிலையை அறிவித்தது. விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முழுமையான அவசர நிலை அறிவிக்கப்பட்டது. 171 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம்   முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.